Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய போகிறது? வானிலை மையம் சொன்ன தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் தென்காசி, நெல்லை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Rain
தமிழகத்தில் கோடை மழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருவதால் கடந்த 10 நாட்களாக வெயில் தாக்கல் குறைந்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hyj761yykn1pftgyxht2eb1m/remal-cyclone_300x169xt.jpg)
Remal Cyclone
இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து புயலாக மாறியுள்ளது. இது தீவிர புயலாக மாறி இன்று நள்ளிரவில் வங்க தேசம் பகுதியில் கரையைக் கடக்கும். புயல் கரையை கடக்கும் போது தரைக்காற்று மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வரை வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Kutralam : குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க அனுமதியா.? சுற்றுலா பயணிகள் செல்லலாமா.? லேட்டஸ்ட் அப்டேட் என்ன.?
Chennai Rain
இந்த புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், சென்னையை பொறுத்த வரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Rain Alert
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணிவரை தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.