மிக்ஜாம் புயலால் குறைந்த வரத்து.. சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலைகள் கிடுகிடு உயர்வு..!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை கோயம்பேட்டில் காய்கறி வரத்து குறைந்துள்ள நிலையில் வெங்காயம், தக்காளி, இஞ்சி விலை சற்று உயர்ந்துள்ளது.
vegetables
சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01he5aegpq1w4mvd9vp47kgmtq/new-project---2023-11-01t170106-644_300x171xt.jpg)
நெல்லிக்காய் ஒரு கிலோ 102 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.64, அவரைக்காய் ஒரு கிலோ ரூ.60 விற்பனையாகிறது.
முட்டைக்கோஸ் ஒரு கிலோ ரூ.10, கேரட் ஒரு கிலோ ரூ.35, காலிபிளவர் ஒரு கிலோ ரூ. 25, கொத்தவரை ஒரு கிலோ ரூ.40, வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூ. 20, முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.130, கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.55, பீன்ஸ் ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இஞ்சியின் தரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றப்படுகிறது அந்த வகையில் ஒரு கிலோ இஞ்சி 150 முதல் 240 வரை விற்பனையாகிறது. வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ. 55, பூசணி ஒரு கிலோ ரூ. 25, பீர்க்கங்காய் ரூ.50க்கும், புடலங்காய் ஒரு கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப்படுகிறது.