செலவே இல்லாமல் உங்க வீட்டில் வாசனை வீச வேண்டுமா..? அப்ப இந்த செடிகளை வையுங்கள்..
நீங்கள் உங்கள் வீட்டில் வளர்க்கும் சில தாவரங்கள் சுத்தமான காற்றைத் தருவது மட்டுமின்றி.. நல்ல மணத்தையும் தருகின்றன. அவை..
வீட்டில் நல்ல நறுமணம் இருந்தால், மனதுக்கும் மூளைக்கும் நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும். இதற்கு பலர் ரூம் ஃப்ரெஷ்னர்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது வெஸ்ட். ஏனெனில் நாம் நம் வீட்டில் வளர்க்கும் சில தாவரங்கள் சுத்தமான காற்றைத் தருவது மட்டுமின்றி.. நல்ல மணத்தையும் தருகின்றன. அவை..
லாவெண்டர் செடிகள் உட்புற தாவரங்களில் ஒன்றாகும். லாவெண்டர் செடியின் வாசனை அருமையாக இருக்கும். இது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும். எனவே, இதை உங்கள் வீட்டின் பால்கனியில் வையுங்கள்.
மல்லிகை செடியும் நல்ல நறுமணத்தை வீசும். இவற்றில் இருந்து வரும் வாசனை நல்ல உற்சாகமான சூழலை உருவாக்குகின்றன. அதுமட்டுமின்றி உங்கள் வீட்டின் தோற்றமும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
புதினா செடியும் நல்ல வாசனையைக் கொடுக்கும். மேலும் இதிலிருந்து வரும் நறுமணம் உணர்வுகளை உற்சாகப்படுத்துகிறது. இவற்றின் இலைகளும் மிகவும் ஆரோக்கியமானவை. அவை சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
யூகலிப்டஸ் சிறந்த வாசனை திரவியங்களில் ஒன்றாகும். இது வீட்டிற்கு ஒரு அற்புதமான நறுமணத்தை கொடுக்கும் மற்றும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். இந்த நறுமணத்தை உள்ளிழுப்பதால் நல்ல நிவாரணம் தருவது மட்டுமின்றி, சுவாசத்திற்கும் நன்மைகள் கொடுக்கும்.