AC யூஸ் பண்ணும் போது 'இந்த' தவறுகளை செய்யாதீங்க.. மின் கட்டணம் ஏகிறும்!
ஏசி பயன்படுத்தும் போது, மின்கட்டணம் குறைவாக வரவும் அறையில் குளிர்ச்சி தங்கவும், நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள் இங்கே உள்ளன. அவை.
கோடை காலத்தில் ஏசியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், சிலருக்கு ஏசியை குறித்த சரியான அறிவு இல்லாமல் அதை தவறாக பயன்படுத்தி குளுமை கிடைக்காமல், மின் கட்டணமும் அதிகமானது தான் மிச்சம். எனவே, இந்தமாதிரி பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தால், ஏசி பயன்படுத்தும் போது நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள் இங்கே உள்ளன. அவை
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hy5v5qhbw37124d4qdne2syt/fotojet--62-_300x171xt.jpg)
பலர் தங்களது வீடுகளில் பர்னிச்சர் அல்லது திரைச்சீலைகளை ஏசியின் முன் இருக்கும். இதனால், குளிர்ந்த காற்று அறைக்குள் செல்வது கடினம். மேலும் அதிக நேரம் ஏசி ஓடிக்கொண்டிருக்கும். எனவே, ஏசியில் இருந்து வரும் காற்று பாதைகள் எப்போதும் திறந்திருக்க தான் வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏசி வென்ட்டின் முன் காற்றைத் தடுக்கும் எந்த ஒருபொருளையும் வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏசியின் வெப்பநிலை குறைவாக இருந்தால் தான் அறை விரைவில் குளிர்ச்சியடையும் என்று நம்மில் சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு.
உங்களுக்கு தெரியுமா... இதனால் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பது மட்டுமின்றி, ஏசியும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆகையால்,
அறை வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை வைத்திருங்கள். அதுதான் நல்லது.
ஏசியின் வடிகட்டி காற்றைச் சுத்தப்படுத்தும் வேலையை தான் செய்கிறது. ஆனால் காலப்போக்கில் அது தூசியால் நிறைந்திருப்பதால், அறைக்குள் குளிர்ந்த காற்று சரியாக வராது. எனவே, 3 மாதங்களுக்கு அதை சுத்தம் செய்யுங்கள்.
இதையும் படிங்க: கோடையில் உங்கள் கார் உள்ளே கூலாக இருக்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..!
ஏசி ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்திருந்தால், குளிர்ந்த காற்று வெளியே செல்லும் மற்றும் சூடான காற்று உள்ளே வருகிறது. இதனால் அறையின் வெப்பநிலையை பராமரிக்க ஏசிக்கு கடினமாகவே இருக்கும். எனவே, ஏசியை பயன்படுத்தும் போது, அறையில் இருக்கும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வையுங்கள். அப்போது தான் அறை குளிர்ச்சியாக இருக்கும்.
இதையும் படிங்க: ஏசி இல்லாமலேயே அறையை குளுகுளுவென்று மாற்றலாம்! இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
அதுபோல, நீங்கள் பயன்படுத்தும் ஏசி அறைக்கு மிகவும் பெரியதாக இருந்தால், அது அறையை சீக்கிரமே குளிர்விக்கும். ஆனால், காற்றில் உள்ள ஈரப்பதத்தை அதால் உலர வைக்க முடியாது. அதே சமயம், ஏசி மிக சிறியதாக இருந்தால், அறையை குளிர்ச்சியாக நீண்ட நேரம் எடுக்கும். எனவே, எப்பொழுதும் உங்கள் அறைக்கு ஏற்ப சரியான அளவிலான ஏசியை வாங்கி பயன்படுத்துங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D