கமல்ஹாசனை தொடர்ந்து.. நடிகர் சங்க கட்டிட பணிக்கு ரூ.1 கோடியை அள்ளிக்கொடுத்த தளபதி விஜய்!
உலக நாயகன் கமல்ஹாசனை தொடர்ந்து தளபதி விஜய், நடிகர் சங்க கட்டிட பணிக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக, நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
Kamal Haasan
நடிகர் சங்கத்தை சேர்ந்த ஓவ்வொரு உறுப்பினர்களும் பயன் பெரும் வகையில், நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன் படி கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய கட்டிடத்திற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில், தற்போது வரை பட்ஜெட் பிரச்சனை காரணமாக நிறைவடையாமல் இழுபறியில் உள்ளது. எனவே சமீபத்தில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க சுமார் 40 கோடி ரூபாய் வரை கடன் பெற பொதுச் செயலாளர் விஷால் ஒப்புதல் அளித்ததாக கூறப்பட்டது.
Kamalhaasan
வங்கியில் கடன் வாங்கி கட்டிடம் கட்டப்பட்ட பின்னர், அந்த கடனை கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைக்கவும் நடிகர் சங்கம் சார்பில் திட்டமிடப்பட்டது. அதே போல் வசதி படைத்த மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களிடம் நிதி கேட்டு வாங்கிய கடனை அடைக்கவும் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் மார்ச் 9ம் தேதி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினராக தற்பொழுது செயல்பட்டு வரும் மூத்த நடிகரும், மநீம கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது சொந்த நிதியிலிருந்து 1 கோடி ரூபாயை நடிகர் சங்கத்திற்கு வழங்கினார். இவரை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், நடிகர் சங்க சங்க பணிக்காக ரூபாய் 1 கோடி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு உறுதி செத்துள்ளது. இந்த அறிக்கையில் "தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் திரு.விஜய் அவர்கள் நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.