நாகர்கோயில் to பொள்ளாச்சி.. சோசியல் மெசேஜ் ஒன்னு இருக்கும்? - வடிவேலு & ஃபகத் இணையும் படத்தின் கதை இதுதானாம்!
Vadivelu and Faasil Movie : பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "மாமன்னன்" திரைப்படம் நடிகர் வடிவேலு அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய கம் பேக் திரைப்படமாக அமைந்தது என்று கூறினால் அது மிகையல்ல. மிக நேர்த்தியாக அந்த திரைப்படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் வடிவேலு.
Actor Vadivelu
பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் பகத் பாசில் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் மாமன்னன். இன்னிலையில் வடிவேலு மற்றும் பாசில் என்று இருவருடைய நடிப்பும் மாமன்னன் திரைப்படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
Maamannan
இதனை தொடர்ந்து அந்த ஜோடி தற்பொழுது மீண்டும் இணை உள்ளார்கள் என்ற தகவல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. தமிழ் திரை உலகில் இதுவரை 97 திரைப்படங்களை தயாரித்து வெற்றி கண்டுள்ள பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி சவுதிரி அவர்களுடைய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள 98 வது திரைப்படத்தில் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளார்கள்.
Fahad Faasil
யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணம் செய்யும் ஒரு வாகனத்தில் இளைஞரான பாசிலும் முதியவரான வடிவேலுவும் பயணிக்கின்றனர். அந்த பயணத்தின் போது நடைபெறும் காமெடியான நிகழ்வுகளும், பின் த்ரில்லிங்காக மாறும் கதைக்களமும் சமூக கருத்து கூறும் விஷயமும் அடங்கிய ஒரு படமாக இது அமையும் என்று தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனவரி கடைசி வாரத்தில் இந்த படத்துக்கான படபிடிப்பு துவங்க உள்ள நிலையில் பிரபல நடிகை சித்தாரா இந்த திரைப்படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.