Rahul Ravi: கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய 'கண்ணான கண்ணே' சீரியல் ஹீரோ தலைமறைவு! மனைவி பரபரப்பு புகார்!
நந்தினி, கண்ணான கண்ணே. போன்ற சீரியல்களில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவி மீது அவரின் மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சன் டிவி தொலைக்காட்சியில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான நந்தினி தொடரில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் ராகுல் ரவி. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே தொடர் TRP-யில் பட்டையை கிளப்பியது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், சில மலையாள தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ராகுல் ரவிக்கும், லட்சுமி நாயர் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு மிகப் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.
தன்னுடைய மனைவியுடன் எடுத்து கொண்ட, போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு லட்சுமி நாயரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ராகுல். இதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து, மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
அவவ்போது தங்களின் காதலை வெளிப்படுத்தும் விதமாக, புகைப்படங்கள் வெளியிடுவது மட்டும் இன்று, ரொமான்டிக் பாடலுக்கு ரீலிஸ் செய்து வெளியிட்டு வந்தனர். ஆனால் கடந்த ஒரு வருடமாக ராகுல் மற்றும் அவரின் மனைவி லட்சுமி நாயர் இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரின் பிரச்சனைக்கு காரணம், ராகுல் ரவிக்கு வேறுறொரு பெண்ணுடன் உள்ள கள்ளத்தொடர்பு என கூறப்படுகிறது. இந்நிலையில் லட்சுமி நாயர்... போலீஸ் தன்னுடைய கணவர் கள்ள தொடர்பு குறித்து புகார் கொடுத்துள்ளதாகவும், இந்த புகாருக்கு பயந்து ராகுல் ரவி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. முன்னணி சீரியல் நடிகரின் கள்ளக்காதல் விவகாரம் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராகுல் ரவி, மனைவி லட்சுமி நாயருடன் இணைந்து போஸ்ட் செய்த அணைத்து புகைப்படங்களையும் நீக்கி விட்டார்.