Ayalaan: தடையை தகர்த்தெறிந்து வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'அயலான்'! இடைக்கால தடை அதிரடி நீக்கம்!
அயலான் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்த நிலையில், தற்போது நீதி மன்றம் 'அயலான்' படத்தின் இடைக்கால தடையை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
Ayalaan Release
இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இந்திய திரை உலகமே இதுவரை பார்த்திராத அளவிற்கு நேர்த்தியான கிராபிக்ஸ் காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது அயலான் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அப்பட ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டுள்ள இயக்குனர் ரவிக்குமார் பிரபல ஹீரோ ஒருவருக்கு ஒரு சயின்ஸ் வெப்சன் கதையை கூறியிருப்பதாகவும் அவரும் சரியான நேரம் வரும் பொழுது அதில் கட்டாயம் நடிக்கின்றேன் என்று கூறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hkd4d6xmawkjtk5jjpktn0rd/ayalaan-trailer_300x171xt.jpg)
Ayalaan Trailer
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில், எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், இஷா கோபிக்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
Ayalaan Tamil Nadu Business
இப்படத்தின் 6 ஆண்டு உழைப்பு, பாழாகி விடுமோ என ஒட்டு மொத்த படக்குழுவின் கலக்கத்தில் இருந்த போது, சிவகார்த்தேன், இப்படம் வெளியானால் போதும் என தன்னுடைய சம்பளத்தையே தியாகம் செய்துள்ளார். இதுகுறித்து இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மிகவும் உருக்கமாக பேசி இருந்தார். ஜனவரி 12-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் இப்படத்திற்கு வந்த சிக்கலால் மீண்டும் படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் எழுந்தது.
Rakul Preet Singh
அதாவது தங்களுக்கு தர வேண்டிய ரூபாய் 1 கோடியை செலுத்தாமல் அயலான் படம் வெளியாக கூடாது டான் தடை கோரி எம்.எஸ். சேலஞ்ச் என்ற விளம்பர நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. எம் எஸ் சேலஞ்ச் விளம்பர நிறுவனத்திற்கு ‘அயலான்’ பட தயாரிப்பு நிறுவனம் ரூபாய் 50 லட்சத்தை திருப்பி செலுத்தியதால் தற்போது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூபாய் 50 லட்சத்தை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் செலுத்துவதாகவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எனவே உயர்நீதி மன்றமும் அயலான் படத்திற்கு விதித்த இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.