நான் விளையாடியிருந்தால் கதை வேற மாதிரி இருந்திருக்கும் – ரிஷப் பண்ட் ஓபன் டாக்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போடியில் நான் விளையாடி இருந்தால் டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
DC vs LSG, IPL 2024
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 208 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 189 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hxw8t5c86k6ekd2x9v087vv3/dc-vs-lsg-103_300x213xt.jpg)
Indian Premier League 2024
இதன் மூலமாக இரு அணிகளும் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளன. இந்த போட்டிக்கு பிறகு பேசிய டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியிருப்பதாவது: இந்தப் போட்டியில் நிக்கோலஸ் பூரன் விளையாடிய விதம் பயத்தை உண்டாக்கியது. அவரை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்று அதிக ரன்ரேட் பெறலாம் என்று நினைத்தோம்.
IPL 2024
டெல்லி அதிக ரன்கள் குவித்தது. நாங்களும் சிறப்பாக பந்து வீசினோம். இந்த சீசனில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், சிலருக்கு காயம் ஏற்பட்டது. கடைசியாக ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பிறகும் கூட பிளே ஆஃப் வாய்ப்பு இருந்தது. கடைசி போட்டியில் நான் விளையாடி இருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருப்போம் என்று கூறியுள்ளார்.
Delhi Capitals
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்லோ ஒவர் ரேட் காரணமாக ரிஷப் பண்ட்டிற்கு ரூ.30 லட்சம் அபராதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அக்ஷர் படேல் கேப்டனாக செயல்பட்டார்.