ரஜினி தவறவிட்ட இடத்தை தட்டிதூக்கிய விஜய்... தளபதியின் அரசியல் எண்ட்ரி குறித்து தலைவர் சொன்ன நச் பதில்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அதற்கு ரஜினிகாந்த் முதன்முறையாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
rajini vijay
நடிகர் ரஜினிகாந்துக்கும் - நடிகர் விஜய்க்கும் இடையே கடந்த ஓராண்டாகவே பணிப்போர் நிலவி வந்தது. இதற்கு காரணம் ரசிகர்கள் தான். விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பரவலாக பேசப்பட்டதால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் விஜய்யை கடுமையாக தாக்கி பதிவிட்டனர். இதற்கு வலுசேர்க்கும் விதமாக ஜெயிலர் பட விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா - கழுகு கதை அமைந்தது. ரஜினி விஜய்யை தாக்கும் விதமாக தான் அந்த கதையை சொன்னதாக சர்ச்சை எழுந்தது.
Rajini about vijay political entry
பின்னர் லியோ பட சக்சஸ் மீட்டில் பேசும் போது சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு முடிவு கட்டிய விஜய். சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒரே ஒருத்தர் தான் என ரஜினிகாந்தை குறிப்பிட்டு பேசினார். விஜய்யை தொடர்ந்து லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், விஜய்க்கும் தனக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை என்று விளக்கம் அளித்து பேசினார்.
இதையும் படியுங்கள்.... ரஜினியின் அப்பாவை பார்த்திருங்கீங்களா? யாரும் பார்த்திடாத பழைய போட்டோ இதோ..
Rajinikanth wishes Vijay
அதோடு தான் காக்கா - கழுகு கதையை விஜய்யை ஒப்பிட்டு சொல்லவில்லை என்றும், இப்படி ரசிகர்கள் சண்டைபோட்டுக் கொள்வதை பார்க்கும் போது கஷ்டமாக இருப்பதாக கூறிய ரஜினி, விஜய் மக்கள் நலப்பணிகளை செய்துவருவதையும் பாராட்டினார். இந்த நிலையில், வேட்டையன் பட ஷூட்டிங்கிற்காக இன்று ஆந்திரா சென்ற ரஜினியிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து கேட்கப்பட்டது.
Rajinikanth
இதற்கு ‘வாழ்த்துக்கள்’ என ஒரே வார்த்தையில் நச் என பதில் கூறிவிட்டு சிங்கநடை போட்டார் ரஜினி. சூப்பர்ஸ்டார் பல வருடங்களாக தான் அரசியலுக்கு வருவேன் என கூறிவிட்டு கடைசியாக கட்சி தொடங்க இருந்த நேரத்தில் அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். அவர் தவறவிட்ட அந்த இடத்தை தற்போது தளபதி விஜய் தட்டிதூக்கி இருப்பதால் அவருக்கு மக்கள் எந்த அளவு ஆதரவு அளிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்.... சூப்பர்ஸ்டாரின் சிங்கப்பெண்... ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?