பாபா தோல்விக்கு பின் தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடிய ரஜினி... சூப்பர்ஸ்டாரின் இந்த முடிவுக்கு காரணம் இவரா?
நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்தின் தோல்விக்கு பின்னர் தன்னுடைய சொந்த தயாரிப்பில் படம் தயாரிப்பதை கைவிட்டது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.
rajinikanth
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் குழந்தைக்கு கூட பிடிக்கும், அந்த அளவுக்கு தன்னுடைய ஸ்டைலாலும் நடிப்பாலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்துள்ளார். தற்போது 72 வயதாகியும் இன்னும் அதே எனர்ஜியுடன் சினிமாவில் இவர் நடித்து வருவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வயதில் நடிப்பது மட்டுமின்றி தன்னுடைய மார்க்கெட் குறையாமல் நம்பர் 1 இடத்திலேயே அவர் நீடித்து வருவது தான் ஆச்சர்யம்.
superstar Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் ஒரு நடிகனாக பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் தயாரிப்பாளராக இருந்தது பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் தமிழில் வீரா மற்றும் பாபா ஆகிய இரண்டு படங்களை மட்டுமே தயாரித்திருந்தார். இதுதவிர மாவீரன் படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தார். ரஜினி தயாரிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால் பாபா படத்தின் தோல்விக்கு பின் படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டார் ரஜினி.
இதையும் படியுங்கள்... கெஸ்ட் ரோலுக்கே இத்தனை கோடி வாங்கினாரா ரஜினி? லால் சலாமில் நடிக்க சூப்பர்ஸ்டார் வாங்கிய சம்பள விவரம் இதோ
Rajinikanth quit producing movies
அதுமட்டுமின்றி அவரின் லோட்டஸ் இண்டர்நேஷனல் என்கிற தயாரிப்பு நிறுவனமும் அதன்பின் செயல்படவில்லை. இந்த நிலையில், ரஜினி பாபா படத்துக்கு பின்னர் படத்தயாரிப்பை கைவிட்டது ஏன் என்பது பற்றி அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ரஜினி தன்னுடைய சொந்த முடிவால் பட தயாரிப்பில் இருந்து விலகவில்லையாம். அவரது ஆன்மீக குரு சொன்னதால் தான் அதை கைவிட்டதாக ஐஸ்வர்யா கூறினார்.
Sachidananda Swami, rajinikanth
சினிமா மூலம் உனக்கு கிடைக்கும் பணத்தை மறுபடியும் சினிமாவுக்குள் போடக்கூடாது. வேறு ஏதேனும் தொழில் முதலீடு செய் என்று ரஜினியின் ஆன்மீக குருவான சச்சிதானந்த சுவாமி சொன்னதால் தான் சூப்பர்ஸ்டார் அந்த முடிவை எடுத்தாராம். ரஜினி ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தன்னுடைய குருவின் சொல்லுக்கு இணங்க தான் பாபாவுக்கு பின் படத்தயாரிப்பை ரஜினி கைவிட்டுள்ளார் என்கிற தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... வடிவேலு.. கவுண்டமணிக்கு கிடைக்காத ஜாக்பார்ட் வாய்ப்பு! கூப்பிட்டு கொடுத்த ரஜினி.! முடியாதுனு சொன்ன செந்தில்!