Thalaivar 169 Update: ரஜினி ரசிகர்களுக்கு டைட்டிலுடன் வந்த சூப்பர் தகவல்...என்னது கதைக்களம் இப்படிப்பட்டதா..?
Thalaivar 169 Update: தலைவர் 169 படத்தின் ஷூட்டிங், கதைக்களம், டைட்டில் என அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
thalaivar 169
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்று தந்தது. அந்த விமர்சனத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி அடுத்ததாக, நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் இணைத்துள்ளார். இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
thalaivar 169
இந்த படத்தில், ரஜினியுடன் சேர்ந்து ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததால், ரசிகர்கள் பலரும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்தால் எப்படி இருக்குமோ என்று புலம்பி வருகின்றனர்.
thalaivar 169
இருப்பினும் ரஜினி கதையில் சிறு சிறு மாற்றங்கள் செய்து நடிக்க தயாராகி வருகிறார். அதன்படி, இம்மாத இறுதிக்குள் கதை தயாராகிவிடும் என்றும், ஜூலை மாதம் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்றும் தகவல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
thalaivar 169
இந்நிலையில், இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் கதைக்களம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தலைவர் 169 படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதையாம். இதனால் இப்படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எந்திரன் திரைப்படத்தில் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய் மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர உள்ளாராம்.