மொபைல் டேட்டா ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 17 சதவீதம் வரை உயர்த்த ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஏர்டெல், ஜியோ போன்ற முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டு கொண்டு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்திய தொலைத்தொடர்பு துறை குறிப்பிடத்தக்க கட்டண உயர்வுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிந்த உடன் இந்த விலை உயர்வை அமல்படுத்த தொலைதொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 5-17 சதவீதம் வரை ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்த்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மொபைல் டேட்டா திட்டங்களுக்கு 17 சதவீதம் வரை கூடுதல் செலவாகும் என்றும் கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரீசார்ஜ் திட்டங்கள் விலை 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு ரீசார்ஜ் திட்டங்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட உள்ளது. 2ஜி வாடிக்கையாளர்களை 4ஜிக்கு மாற்றுவது மற்றும் 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டிலும் அதிக டேட்டா திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களின் இடம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் தற்போதைய நிலவரப்படி, இந்த கட்டண உயர்வு குறித்து நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஏர்டெல் தனித்துவமான 5G ரோல்அவுட் உத்தியால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், ஆய்வாளர்கள் அதன் வளர்ச்சியைத் தக்கவைக்கும் திறனில் நம்பிக்கையுடன் உள்ளனர். மேலும், தற்போதைய மதிப்பீடுகள் தொலைத்தொடர்புத் துறையில் நேர்மறையான வேகத்தை முழுமையாகப் பிடிக்கவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். 2024-0226 நிதியாண்டில் பார்தி ஏர்டெல்லின் திட்டமிடப்பட்ட மூலதனச் செலவு (கேபெக்ஸ்) 5G வெளியீடு உட்பட தோராயமாக ரூ.75,000 கோடியாக உள்ளது.

கடந்த 5.5 ஆண்டுகளில், பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் இழப்பில் தொடர்ந்து சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன. செப்டம்பர் 2018 முதல் வோடபோன் ஐடியாவின் சந்தைப் பங்கு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ள நிலையில், சந்தையில் அதன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி, ஜியோ மிகப்பெரிய லாபகரமாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.