இன்னைக்கு 10 மணிக்குள் சென்னை உள்ளிட்ட இந்த 6 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்.. வானிலை மையம் அலர்ட்..!
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்து 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை கனமழை போட்டு தாக்கி வருகிறது. இதனிடையே, வங்கக் கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 3ம் தேதி புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hbj0f093tpjg9gmhd6vrt50w/chennai-rain-1_300x169xt.jpg)
இதன் காரணமாக டிசம்பர் 2-ம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:- School College Holiday: வெளியான மாஸ் அறிவிப்பு.. பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை.!