Rachitha: பிக்பாஸ் ரக்ஷிதாவை துக்கத்தில் ஆழ்த்திய தந்தையின் திடீர் மரணம்! மனைவிக்கு ஆறுதல் சொல்ல ஓடிய தினேஷ்!
பிக் பாஸ் ரக்ஷிதாவின் தந்தை, இன்று காலை உடல்நல குறைவு காரணமாக திடீரென மரணம் அடைந்துள்ள நிலையில், இதை கேள்விப்பட்ட ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் தற்போது பெங்களூருக்கு விரைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Rachitha Mahalakshmi serial:
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா மஹாலட்சுமி. பெங்களூரைச் சேர்ந்த இவர், இந்த சீரியலுக்குப் பின்னர் அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்க துவங்கினார். எனினும் இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்றால், அது விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் தான்.
Saravanan Meenatchi Serial
சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் தனக்கு பேர்ராக நடித்த, சீரியல் நடிகர் தினேஷை காதலித்து கரம் பிடித்த ரக்ஷிதா, மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து வரை சென்றது.
Rachitha Mahalakshmi Enter biggboss Season 5
தன்னுடைய கவலைகளை மறப்பதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரக்ஷிதா, அங்கு கூட தன்னுடைய கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் தினேஷ் வெளியே இருந்தபடி தன்னுடைய மனைவிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் தங்களுக்குள் இருப்பது சிறு பிரச்சனை மட்டுமே என்றும், தன் மீதும் தவறு இருப்பதாக வெளிப்படையாக கூறிய தினேஷ்... தன்னுடைய மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக தெரிவித்தார்.
Rachitha Mahalakshmi husband Dinesh:
இதன் பின்னர் தினேஷ் ரக்ஷிதாவை சந்திக்க முயன்ற போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட விவாதம் காவல் நிலையம் வரை சென்றது. தினேஷ் மீது ரக்ஷிதா பொய் புகார் கொடுத்ததும் வெட்ட வெளிச்சம் ஆனது. ஆனால் இதுவரை இவர்கள் இருவருக்குள்ளும் விவாகரத்து நடக்காத நிலையில், தொடர்ந்து இருவரையும் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.
Rachitha Mahalakshmi Father Death:
இந்நிலையில் ரக்ஷிதாவின் தந்தை, கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும், இவரை பார்த்து கொள்வதற்காகவே பல வாய்ப்புகளை தவிர்த்து விட்டு, ரக்ஷிதா அவரை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பெங்களூருவில் உள்ள தன்னுடைய வீட்டில் ரக்ஷிதாவின் தந்தை காலமானார்.
Dinesh Go to Bangalore:
தந்தையின் மரணத்தால் நிலை குலைந்து சோகத்தில் மூழ்கியுள்ள ரக்ஷிதாவின் குடும்பத்திற்கும், தன்னுடைய மனைவிக்கும் ஆறுதல் கூற... இந்த தகவலை அறிந்த தினேஷ் உடனடியாக பெங்களூருக்கு விரைந்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ரக்ஷிதாவின் தந்தை மரணத்திற்கு பின்னர் ஆவது, இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D