இனி சீரியல் செட் ஆகாது.! கணவரோடு சேர்ந்து சட்டு புட்டுன்னு.. புது பிஸ்னஸில் இறங்கிய பிரியங்கா நல்காரி.!
'ரோஜா' சீரியல் நாயகி பிரியங்கா நல்காரி ஹீரோயினாக நடித்து வரும் 'நளதமயந்தி' சீரியலில் இருந்து அவர் விலகி விட்டதாக கூறப்படும் நிலையில் கணவருடன் சேர்ந்து புது பிஸ்னஸ் ஒன்றை துவங்கியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'நளதமயந்தி'. இந்த சீரியலில் நடன இயக்குனர் நந்தா ஹீரோவாக நடிக்க, சன் டிவி 'ரோஜா' சீரியல் மூலம் பிரபலமான பிரியங்கா நல்காரி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
பிரியங்கா, ரோஜா தொடர் முடிவுக்கு வந்த உடன்... ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சீதா ராமன்' தொடரில் நடித்து வந்தார். பின்னர் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்ட பின்னர் இந்த சீரியலில் இருந்து விலகியதால் இனி சீரியலில் நடிக்க மாட்டார் என்கிற தகவல் பரவியது.
nala damayanthi Serial
இதை தொடர்ந்து அதிரடியாக, ஜீ தமிழில் துவங்கப்பட்ட 'நளதமயந்தி' என்கிற தொடரில் நாயகியாக நடிக்க துவங்கினார். ஹோட்டல் நடத்தி வரும் பெண் எப்படி.. பணக்கார பிஸ்னஸ் மேனை திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் இருவரும் வாழ்க்கையில் ஒன்றிணைவார்களா? என்கிற கேள்விகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
Vijay tv Serial fame srinithi
உருக்கமான கதிர்காலத்துடன் இந்த சீரியல் சென்று கொண்டிருந்த நிலையில்... பிரியங்காவின் தமயந்தி கேரக்டர் இறந்து விட்டதாக காட்டப்பட்டு வருகிறது. அதே போல் விஜய் டிவி தொலைக்காட்சியில் 'செந்தூர பூவே' தொடரில் நடித்த ஸ்ரீநிதி தான் இந்த சீரியலில் தமயந்தியின் தங்கையாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட, பிரியங்கா நல்காரி விலகிவிட்டது போலவே காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரியங்கா தன்னுடைய கணவருடன் சேர்ந்து புதிய ரெஸ்டாரெண்ட் ஒன்றை துவங்கி உள்ளதாக அண்மையில் அறிந்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.