குழந்தைகளை கடுமையாக தண்டிக்கும் பெற்றோரா நீங்கள்? இனி அதை செய்யாதீங்க.. ஏன் தெரியுமா?
ஆரோக்கியமான பெற்றோர்-குழந்தை உறவை உருவாக்க, நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்காமல், மாற்று முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான பயணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் அல்லது வளர்க்க கூடாது என்பது பற்றி பல விவாதங்கள் அவ்வப்போது எழுகின்றன. அதில் குறிப்பாக குழந்தைகளை தண்டிப்பது என்பது ஹாட் டாபிக்காகவே இருக்கும். நம் குழந்தைகளை வளர்க்கும் போது, திட்டுவது, கத்துவது அல்லது அச்சுறுத்துவது அல்லது தண்டனை வழங்குவது போன்ற கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை செய்யக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மாறாக மிகவும் நேர்மறையான அணுகுமுறையுடன் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியமான பெற்றோர்-குழந்தை உறவை உருவாக்க, நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்காமல், மாற்று முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hcyvfhr70p7g7vcjhecj53cq/2--13-_300x399xt.jpg)
கடுமையான வார்த்தைகள் அல்லது உடல் ரீதியான தண்டனைகள், குழந்தைகளின் எதிர்ப்பையும் வன்முறை உணர்வையும் தற்செயலாக ஊக்குவிக்கும். தங்கள் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் குறைவு. இது அந்த சிக்கலை மோசமாக்கும். எனவே குழந்தைகளை கடுமையாக தண்டிக்காமல் அவர்களுக்கு புரியும் படி எடுத்து கூறுவது நல்லது.
பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான நம்பிக்கையும் வெளிப்படையான தொடர்பும் ஒரு வலுவான உறவின் அடித்தளத்தை உருவாக்கும். ஆனால் நீங்கள் கொடுக்கும் தண்டனை, துரதிர்ஷ்டவசமாக, இந்த அடித்தளத்தை சிதைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை உறவுகளை சீர்குலைக்க வழிவகுக்கும், இதனால் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் நம்பிக்கை வைப்பதே கடினமாக மாறும். மேலும் தங்களுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும்போது பெற்றோரின் வழிகாட்டுதலைப் பெறவே அவர்கள் யோசிப்பார்கள்..
குழந்தைகளுக்கு தண்டனை வழங்கும் போது அது அந்த குழந்தையின் மன வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை எதிர்மறையாக பாதிக்கலாம். வாழ்க்கையின் பிற்பகுதியில், போதைப்பொருள் பழக்கம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. குழந்தைகள் செய்யும் தவறுக்காக அவர்களை தண்டிக்கும் போது, அது அவர்களின் நீண்டகால நல்வாழ்வை பாதிக்கலாம்.
குழந்தைகளை தண்டிக்கும் போது அது தேவையில்லாத செய்தியை கற்பிக்கிறது. அதாவது வன்முறையை தண்டனையின் ஒரு வடிவமாகப் பயன்படுத்துவது சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான சரியான வழிமுறைகள் என்பதை அவர்களுக்கு கற்பிக்கிறது. இந்த தவறான பாடம் மற்றவர்களை கொடுமைப்படுத்துவதற்கு அல்லது கொடுமைப்படுத்துவோரின் இலக்குகளாக மாறுவதற்கு வழிவகுக்கிறது.
எனவே பெற்றோர் குழந்தைகளை தண்டிப்பதற்கு பதிலாக, அவர்களின் எதிர்பார்ப்புகளையும் எல்லைகளையும் புரிந்துகொள்ள தெளிவான வழிகாட்டுதல்களை அமைப்பதே சிறந்த வழியாக இருக்க முடியும். உங்கள் குழந்தையின் முயற்சிகளை அங்கீகரித்து பாராட்டுவதன் மூலம் நேர்மறையான நடத்தையை வலுப்படுத்துங்கள். தங்கள் செய்யும் செயல்களின் செயல்களின் விளைவுகளை அனுபவிக்க குழந்தைகளை அனுமதிக்கவும். நாம் இதை செய்தால் இது நடக்கும் என்பதை புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுகிறது. .