அப்போவே எனக்கு அது கிடைத்தது.. ஆகவே பெரிய அளவில் ஆசை இல்லை - திரை வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஓவியா!
கேரளாவின் த்ரிசூரில் பிறந்து, தமிழில் வெளியான களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தான் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆர்மி அமைத்து கொண்டாடப்பட்ட முதல் நடிகை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Oviya in Kalavani Movie
கேரளாவில் பிறந்து கடந்த 2007ம் ஆண்டு வெளியான கங்காரு என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் ஓவியா. அதன்பிறகு தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான நாளை நமதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், ஆனால் அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு புதுமுக இயக்குனர் ஏ சற்குணம் இயக்கத்தில் பிரபல நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி என்ற திரைப்படம் தான் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை தந்தது.
Oviya
அன்று தொடங்கி இன்று வரை தமிழில் மெரீனா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் என்று பல நல்ல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார் ஓவியா. இந்த சூழலில் தான் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய பிக் பாஸ் தமிழின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் ஓவியா.
Kollywood Actress Oviya
இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பங்கேற்று பேசிய நடிகை ஓவியா தனது திரையுலக வாழ்க்கை மற்றும் அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார். "தனக்கு பெயர் பெற்று தந்த களவாணி திரைப்படம் தான் தனது மனதிற்கு மிக நெருக்கமான திரைப்படம் என்று கூறிய அவர், பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் ஆசை தன்னிடம் இல்லை" என்று கூறியுள்ளார்.
Actress Oviya
பெரிய செலிபிரிட்டி என்ற புகழ், பிக் பாஸ் முடிந்தவுடனேயே தனக்கு கிடைத்தது என்றும், ஆகையால் தனக்கு பெரிய அளவில் ஆசை எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். கிடைக்கும் படங்களில் தந்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பது மட்டுமே தனது வேலை என்று கூறியுள்ளார். இறுதியாக களவாணி 2 படத்தில் நடித்த ஓவியா, தற்போது 3 தமிழ் படங்களில் நடித்து வருகின்றார்.