Bigg Boss Archana: நீ ஏன் லவ் சொன்ன..? அர்ச்சனாவை நேரம் பார்த்து சிக்க வைத்த நிக்சன்! களோபரமான பிக்பாஸ் வீடு!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில்... தினம் தோறும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக போட்டியாளர்கள் முட்டி மோதி கொள்வதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், நிக்சன் அர்ச்சனாவின் பர்சனல் விஷயங்களை இழுத்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
BB Tamil 7
நேற்றைய தினம், விஷ்ணு தன்னுடைய கேப்டன்சியில் போட்டியாளர்களுக்கு ஓர வஞ்சனை செய்வதாக, தனக்கு இருந்த குறைகளை விஷ்ணுவிடம் பேசி சண்டை போட்டார். அப்போது உப்புமா சாப்பிட்டு கொண்டிருந்த அர்ச்சனா, வாண்டடாக வாயை விட... நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கு ஒரு வார்த்தை போர் நடந்தது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hgwshjtfssys108paas8acxn/v2_300x169xt.jpg)
அர்ச்சனா இந்த பிரச்னையை செம்ம கூலாக டீல் செய்தாலும்... வினுஷா பற்றி இழுத்து பேசியது நிக்சனுக்கு கோபத்தை தூண்டியது. அதே போல் நீ ஆகும்... இங்கும் ஐஷுவுடன் அமர்ந்து பேசியதால் தான் ஐஷு பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியேறினார் என கூறினார். இதனால் கடுப்பா நிக்சன் தன்னுடைய பர்சனல் பற்றி பேச வேண்டாம்... எனக்கான பிரச்னையை நான் பார்த்து கொள்கிறேன் என சண்டை போட்டார்.
மேலும் அர்ச்சனா மேல் இருந்த கோபம்... தலைகேறியதால், அவரை போடி என திட்டியது மட்டும் இன்றி, நாயே, தூ என துப்பி... இனி வினுஷா பற்றி பேசினால் சொருகிடுவேன் என வார்த்தையை விட்டது, பார்பவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. மேலும் எல்லா விஷயத்திலும் நடு நிலையோடு பேசும் விசித்ரா இந்த முறை... அப்படியே மாயா கேங் பக்கம் சாய்ந்து, அமைதியாக இருந்த அர்ச்சனாவை திட்டி நிக்சனை அடக்கியது செம்ம ஹை லைட்.
BB Tamil 7
இந்த பிரச்சனையில்... அர்ச்சனாவின் லவ் விஷயத்தை அனைவர் முன்பும் போட்டு உடைத்துள்ளார் நிக்சன். ஐஷு பற்றி அர்ச்சனா பேசியதால்... அர்ச்சனா அவரின் காதலருக்கு லவ் சொன்னதையும், காதலருக்கு நிக்சனிடம் கவிதை எழுதி தருமாறு கூறியதையும் பப்லிக்காக பேசியுள்ளார். ஏற்கனவே அர்ச்சனா அடிக்கடி ஸ்மோக் செய்து வருவதை போட்டியாளர்கள் விமர்சித்து வந்த நிலையில்... இப்போது காதல் கதையும் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.