ரூ.4.5 கோடி பென்ட்லி, டைமண்ட் சோக்கர்.. ராதிகாவுக்கு நிதா - முகேஷ் அம்பானி கொடுத்த காஸ்டலி பரிசுகள்!
தங்களின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கு முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானி கொடுத்த காஸ்டலி பரிசுகள் பற்றிய தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் கடைசி மகனான ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், மார்ச் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை ஆனந்த் - ராதிகாவின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை குஜராத்தில் உள்ள ஜாம்நகர் பகுதியில் நடத்த அம்பானி குடும்பத்தினர் திட்டமிட்டனர். அதன்படி இதில் ஏராளமான திரைபரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், தேசிய அளவிலான பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் நிதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர், தங்களின் வருங்கால மருமகளுக்கு கொடுத்த காஸ்டலி கிப்ட் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு, மாமியார் நிதா அம்பானி தங்களின் குடும்ப வழக்கப்படி வெள்ளியிலான லட்சுமி மற்றும் விநாயகர் சிலைகளை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் பூஜையில் பயன்படுத்தப்படும் வெளியிலான துளசி மாடம், தூபக்கால், பஞ்ச பாத்திரம் உள்ளிட்ட சில பொருட்களை கொடுத்ததாக கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி, மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு அவர்களின் நிச்சயதார்த்த நாளில் சுமார் ரூ.4.5 கோடி மதிப்புள்ள அழகான பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீடு காரை பரிசாக கொடுத்துள்ளார். இந்த காரை விராட் கோலி, அமீர் கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட சிலர் மட்டுமே வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தவிர தனக்கு மிகவும் பிடித்தமான வைர சோக்கர் ஒன்றையும் ராதிகாவுக்கு நிதா அம்பானி பரிசாக கொடுத்துள்ளார். நிதா அம்பானியின் இந்த சோக்கரை, ராதிகா... முகேஷ் அம்பானியின் குடும்ப உறவினரான இஷேதா சல்கோகரின் காக்டெய்ல் பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது அணிந்திருந்தார். இந்த டைமண்ட் சோக்கரை சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நிதா அம்பானி அணிந்திருந்தது குறிபிடத்தக்கது.