சுடருக்கு தாலி கட்ட போன வேலு.. கடைசி நொடியில் ட்விஸ்ட் கொடுத்த எழில்? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வேலு தமிழை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, எழில் ஓவியம் ஒன்றை வைத்து கவின் இங்கு தான் இருக்க வேண்டும் என்று கண்டுபிடித்து அவர்களை மீட்டெடுக்கிறான். பிறகு இருவரும் தமிழை காப்பாற்றணும்... தமிழ் இல்லாம வீட்டுக்கு போக கூடாது என்று சொல்கின்றனர்.
Uma Ramanan Death: இது தான் உமா ரமணனின் ஆசை! நிறைவேற்றுங்கள்... கணவர் வெளியிட்ட உருக்கமான வீடியோ!
மறுபக்கம் தமிழுக்கு கல்யாணம் ஏற்பாடுகள் நடக்க, எழில் கடைசி நொடியில் வந்து கல்யாணத்தை நிறுத்தி தமிழை காப்பாற்றுகிறான். அதன் பிறகு இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஹாஸ்பிடல் வருகின்றனர்.
மனோகரி சுடரை ஹாஸ்பிடல் உள்ளே விடமாட்டேன் நின்று பிரச்சனை செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலுக்கு கார்த்திருப்போம்.