ஆவியாக வந்த இந்து; பீதியில் மனோகரி.. நினைத்தேன் வந்தாய் சீரியலில் செம்ம ட்விஸ்ட் வெயிட்டிங்
நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் சுடரின் அப்பா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
ninaithen Vandhai Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரின் அப்பா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil ninaithen Vandhai Serial
அதாவது, சுடரின் அப்பா இந்து இருந்த ஹாஸ்பிடல் வார்டன் வந்து சந்திப்பதாக சொல்லி இருப்பதாக சொல்ல அக்கா சீக்கிரம் கிடைச்சிடுவா என்று சுடர் சொல்கிறாள். இதையடுத்து இந்து குழந்தைகளுக்கு தெரியாமல் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளிடம் நேரத்தை செலவிடுகிறாள். இந்த நேரம் பார்த்து மனோகரி அங்கு வந்து உட்காருகிறார்.
இதையும் படியுங்கள்... தங்கம் விக்கிற விலையில்.. பிரேம்ஜி மனைவிக்கு இத்தன சவரன் நகை சீதனமாக வழங்கப்பட்டதா? பயில்வான் சொன்ன ஷாக் தகவல்
ninaithen Vandhai Serial Update
சுடர் பக்கத்திலேயே அமர்ந்து அவளை முறைத்தபடி உட்கார்ந்திருக்க மனோகரிக்கு இந்து அங்கு உட்கார்ந்திருப்பதை போல் தோன்றுகிறது. இதையடுத்து பயந்து போய் வெளியே வருகிறாள் மனோகரி செல்வியிடம் விஷயத்தை சொல்கிறாள். செல்வி எனக்கு தெரிந்த ஒரு சாமியார் இருக்கிறார்.
ninaithen Vandhai Serial Today Episode
அவரை வீட்டுக்கு வர வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல மறுநாள் சாமியாரும் வீட்டிற்கு வருகிறார். ஆனால் போலி சாமியாரான அவர் வீட்டில் உள்ள பொருட்களை திருடும் வேலைகளை செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... சந்தியா ராகம் சீரியல் : உனக்கு இந்த வீட்ல இடமில்ல; காதல் கல்யாணம் செய்ய நினைத்த மாயாவுக்கு ரகுராம் வைத்த செக்