சென்னையை மீண்டும் ஒரு புயல் தாக்கப்போகுவதா? அலறும் பொதுமக்கள்! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுவது என்ன?
மீண்டும் ஒரு புயல் அடுத்த வாரம் சென்னையை தாக்க உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். காற்றுடன் பெய்த கனமழையால் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு பகல் பாராமல் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் மெல்ல மெல்ல தலைநகர் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. சென்னையில் 80 சதவீத இடங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் தேங்கிய வடசென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாமல் இருப்பதால் மின்சாரம் வழங்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையை நோக்கி அடுத்த புயல் உருவாக உள்ளதாக செய்திகள் வெளியானது பொதுமக்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வதந்திகளை நம்பாதீர்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- சென்னையை நோக்கி அடுத்த வாரம் புதிய புயல் உருவாகியுள்ளதாக உலா வரும் வதந்தி அடிப்படையற்றது. இதுபோன்ற தகவல்களை நம்ம வேண்டாம். அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை 10ம் தேதி இருக்கலாம். ஆனால், அதனால் சென்னைக்கு பாதிப்பு ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.