நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் சாதிய மோதலை துண்டுகிறாரா பா.ரஞ்சித்? ஒரே வார்த்தையில் சொன்ன ஹிப் ஹாப் ஆதி!
நெல்லை தீபக் ராஜா கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது இருப்பினும் ஆணவக் கொலைக்கு நான் எதிரானவன் என ஹிப் ஹாப் ஆதி கூறியுள்ளார்.
PT Sir
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ஹிப் ஹாப் ஆதி: படத்தை வெற்றி அடையச் செய்த அனைவருக்கும் நன்றி. இரவு காட்சி திருச்சியில் 800 இருக்கைகளுக்கு மேல் கொண்ட இந்த திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடையில் குறிக்கிட்ட படத்தின் ஒளிப்பதிவாளர் இந்த திரையரங்கில் படத்தின் குவாலிட்டி மிக அருமையாக இருக்கிறது என தெரிவித்தார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hysnf9jp0dtp9ekzaker3n2w/hiphop-tamizha---copy_300x169xt.jpg)
Hiphop Tamizha Adhi
பெண்கள் கூட்டமாக வந்து படத்தை பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார்ஆதி, மதுரை தூத்துக்குடி திருச்சி என அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறோம் நாளை கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சென்று திரைப்படம் பார்க்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இங்கு வந்தபோது ரசிகர்கள் எங்களை வரவேற்ற விதம் எங்களது களைப்பை போக்கிவிட்டது. இத்தகைய ரசிகர்கள் எனக்கு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது நான் கொடுத்து வைத்தவன் என்றார் ஆதி.
Hiphop Adhi
சில youtubeகளில் இத்திரைப்படத்தை பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவதை பற்றி எனக்கு கவலை இல்லை அது அவர்களின் கருத்து திரையரங்குகளில் இந்த படத்தின் வெற்றியை நீங்களே பார்க்கின்றீர்கள், அப்படி எதுவும் குறை இருந்தால் அதை அடுத்தடுத்த படங்களில் நிவர்த்தி செய்வேன். தொடர்ந்து நல்ல படைப்புகளை தருவேன் என்றார் . நடிகர், இசையமைப்பாளர், ஹிப் ஹாப் பாடகர் என என்னை அனைத்து பரிமாணங்களிலும் பார்க்கலாம்.
இதையும் படிங்க: Pa Ranjith: சாதிய மோதலை தூண்டுகிறார்! ரவுடி தீபக் ராஜா கொலையால் இயக்குநர் பா. ரஞ்சித்திற்கு வந்த சிக்கல்!
pa ranjith vs Hiphop Tamizha Adhi
நான் கலைஞனாக சமுதாய கருத்துள்ள படைப்புகளை கொடுக்கவே விருப்பப்படுவேன். நெல்லை தீபக் ராஜா கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது இருப்பினும் ஆணவக் கொலைக்கு நான் எதிரானவன். பா.ரஞ்சித் என்ன சொன்னார் என்பதும் எனக்கு தெரியாது அதனால் அதனைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என்றார். ஆணவ கொலைக்கு எதிராக நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஹிப் ஹாப் பாடல் எழுதியுள்ளேன் என அப்பாடலில் சில வரிகளை பாடிக் காட்டினார்.