காக்கா முட்டை இயக்குனர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்... நகை, பணம், விருதுகள் அபேஸ்!
காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி போன்ற தேசிய விருது வென்ற படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
manikandan
தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்த காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் மணிகண்டன். இப்படத்திற்கு சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. முதல் படத்திலேயே தேசிய விருது வென்று முத்திரை பதித்த மணிகண்டன், அடுத்ததாக வித்தார்த் நடித்த குற்றமே தண்டனை, விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை போன்ற திரைப்படங்களை இயக்கினார். இப்படங்களுக்கும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hp5yy4m3m4mrwkgsrdkke8e3/new-project---2024-02-09t090224-931_300x355xt.jpg)
Director manikandan
இதையடுத்து இவர் இயக்கத்தில் கடைசி விவசாயி என்கிற திரைப்படம் வெளியானது. இப்படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி பேசி இருந்தார் மணிகண்டன். இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விவசாயியாக நடித்த நல்லாண்டி என்பவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து விஜய் சேதுபதியை வைத்து வெப் தொடர் ஒன்றை இயக்கும் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகிறார் மணிகண்டன்.
இதையும் படியுங்கள்... தேசிய விருது ஊக்கம் கொடுத்துள்ளது..! கடைசி விவசாயி பட இயக்குனர் மணிகண்டன் நெகிழ்ச்சி..!
Kadaisi Vivasayi Director Manikandan
இயக்குனர் மணிகண்டனின் சொந்த ஊர், உசிலம்பட்டியை அடுத்த விளாம்பட்டி. இவரது சொந்த வீடு மற்றும் அலுவலகம் அங்குள்ள எழில் நகரில் அமைந்துள்ளது. பட வேலையாக கடந்த 2 மாதங்கள் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்துள்ளார் மணிகண்டன். அவரது உசிலம்பட்டி வீட்டில் ஆள் இல்லாததை நோட்டம் விட்ட திருடர்கள் அங்கிருந்து நகை, பணம் மற்றும் விருது ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
Manikandan house Robbery
மணிகண்டன் வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்களுக்கு உணவளிக்க தினசரி அவரது டிரைவர்கள் வருவார்களாம். அப்படி நேற்று மணிகண்டன் வீட்டுக்கு அவர்கள் உணவளிக்க சென்றபோது தன் வீட்டின் கதை உடைக்கப்பட்டு திருடப்பட்டதை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டன் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் பணம், 5 பவுன் தங்க நகை மற்றும் தேசிய விருது வென்றபோது வழங்கப்பட்ட இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் ஆகியற்றை கொள்ளையர்கள் அபேஸ் செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... 'கடைசி விவசாயி' படத்திற்கு பின்னர் மீண்டும் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி!