MTC Bus: இருசக்கர வாகன ஓட்டிகள் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்காமல் இருக்க எம்டிசியின் மாஸ் ஐடியா!
இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் எம்டிசி பேருந்துகளின் கீழ் இரு புற பக்கவாட்டிலும் தடுப்பு கம்பிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பேருந்துகள் செல்லும் போது பக்கவாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சக்கரத்துக்கு அடியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களை தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேருந்துகளுக்கு இரு புறமும் கீழ் பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
MTC
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எக்ஸ் தளத்தில்: பேருந்து சக்கரங்களுக்கு இடையே விபத்து தடுப்பு கம்பிகளை அமைப்பதன் மூலம் மாநகர பேருந்துகளின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம். இரு சக்கர வாகன ஓட்டிகள் பேருந்தை முந்திச் செல்லும் போதோ, அல்லது எதிர்பாரா நேரங்களிலோ யாரும் பேருந்துக்கு அடியில் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: School College Holiday: ஜூன் 21-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!
MTC bus
இதற்காக 2,212 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல்கட்டமாக 600 பேருந்துகளிலும், இரண்டாவது கட்டமாக 1,612 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 715 பேருந்துகளில் இந்த பாதுகாப்பு வசதி பொருத்தப்பட்டுள்ளது. கம்பிகளை பொருத்தும் பணி தொடர்ந்து முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.