திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின் பிறந்த மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா!
சரவணன் மீனாட்சி சீரியலில், ரீல் ஜோடியாக நடித்து ரியல் ஜோடியாக மாறிய மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்.ஜே-வாக இருந்து நடிகராக மாறியவர் மிர்ச்சி செந்தில். தவமாய் தவமிருந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மிர்ச்சி செந்தில், முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ஃபிலிம் ஃபேர் விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து 'என்னமோ ஏதோ', 'சென்னை 28', 'செங்காத்து பூமியிலே', 'கண் பேசும் வார்த்தைகள்' என சில படங்களில் நடித்தார்.
திரைப்படங்கள் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், சீரியல்களில் இவரது கவனம் சென்றது. அந்த வரிசையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மதுரா, கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்தார்.
Ayalaan: தடையை தகர்த்தெறிந்து வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'அயலான்'! இடைக்கால தடை அதிரடி நீக்கம்!
இதில் சரவணன் மீனாட்சி தொடர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பல படங்களில் வாய்ப்பையும் மிர்ச்சி செந்திலுக்கு பெற்று தந்தது. இந்த சீரியலில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜா என்பவர் நடித்தார். இந்த தொடரில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததாக ரசிகர்கள் கூறிய நிலையில், உண்மையிலேயே இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் ஆகி சுமார் 8 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா ஜோடிக்கு, கடந்த ஆண்டு மகன் ஒருவர் பிறந்தார். குழந்தை பிறந்த 6 மாதத்துக்கு பின்னரே, இந்த தகவலை இருவரும் வெளியிட்டனர்.
தற்போது மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஜோடிகளின் மகனுக்கு நேற்று முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இதை மிக பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்துள்ள இந்த சின்னத்திரை ஜோடி, மகனின் பிறந்தநாள் புகைப்படத்தை வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
செந்தில் - ஸ்ரீஜாவின் குட்டி மகன்... பார்ப்பதற்கு அப்படியே, அவரது அம்மா ஸ்ரீஜாவை போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் பிறந்தநாள் ஸ்பெஷலாக மூன்று பெரும் ஒரே நிற உடையில்... கொள்ளை அழகில் ஜொலிக்கிறார்கள். ஸ்ரீஜா தற்போது, சீரியலை விட்டு விலகி பொறுப்பான குடும்ப தலைவியாக இருக்கும் நிலையில்... செந்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அண்ணா' என்கிற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.