கேப்டனின் திருவுருவப்படம்.. மலர் தூவி அஞ்சலி செலுத்திய அமைச்சர் பியுஷ் கோயல் - குடும்பத்தாருக்கு ஆறுதல்!
Minister Piyush Goyal : மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள், மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Piyush Goyal
கலைத்துறை, அரசியல் உலகம் என்று மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் மூழ்கிய ஒரு நாளாக மாறியது கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி. கடந்த சில மாதங்களாகவே உடல்நல குறைவோடு சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்த தே.மு.தி.க-வின் முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் அதன் பின் அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளியானது.
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமில்லை சட்டமன்றத்திலும் கூட்டணி இல்லை..! பாஜகவிற்கு ஷாக் கொடுத்த எடப்பாடி
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hkmd00wjkh37m2desyg75kk0/minister-piyush_300x199xt.jpg)
Minister Piyush
இந்த சூழலில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலை சுமார் 6:15 மணியளவில் நிமோனியா பாதிப்பு காரணமாக அவருடைய உயிர் பிரிந்தது. அரசு மரியாதையோடு கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி மாலை சுமார் 4.30 மணி அளவில் அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்பொழுது திரைத்துறையை சார்ந்தவர்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும் பொது மக்களும் தொடர்ச்சியாக அவருடைய நினைவிடத்தில் வந்து தங்களுடைய இறுதி மரியாதையை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு செலுத்தி வருகின்றனர்.
Captain Vijayakanth
தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், விஜயகாந்தின் உடலை பார்த்து கண்கலங்கி நின்ற காட்சிகள் காண்போரை நெகிழச்செய்தது. தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய இல்லத்திற்கு சென்று அவருடைய குடும்பத்தாரை சந்தித்து தங்களுடைய ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
Prema Latha
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், இன்று ஜனவரி 8ம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய இல்லத்திற்கு சென்று, அவருடைய திருஉருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பிறகு அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன் பிரபாகரன் உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதலை தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது!