TASMAC Shop: குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 3 நாட்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Parliament Election
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல்கள் கட்சிகள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
TASMAC Shop
மறுபுறம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கெல்லாம் கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை இந்நிலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TASMAC Shop Holiday
அதாவது தமிழகத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.