Karthigai Deepam: தப்பிய தீபா.! மீண்டும் ஏமார்ந்த கார்த்திக் - கார்த்திகை தீபம் சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா பல்லவியாக வந்து பாடுவது போல நினைத்து பார்த்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது எல்லா ஏற்பாடுகளும் செய்து கார்த்திக் உட்பட எல்லாரும் பல்லவிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் தீபா நைசாக வெளியே சென்று பர்தா அணிந்து தனது முகத்தை மறைத்து கொண்டு பல்லவியாக வந்து பாடுகிறாள்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hj8w94f24ekph4xc24vdsw1p/661579fe-4af2-4bdd-85ad-2e49b5a8c711_300x168xt.jpg)
கார்த்திக் குரலை கேட்டதும் இவங்க தான் உண்மையான பல்லவி என்று சந்தோஷப்படுகிறான். ரெக்கார்டிங் நடந்து முடிய கார்த்திக் நல்லவேளை நீங்க சொன்ன மாதிரி வந்து பாடி கொடுத்துடீங்க. இதனால் எல்லா வேலைகளையும் இன்னைக்கே முடித்தே சொன்ன மாதிரி பாட்டை நல்ல விதமாக ரிலீஸ் செய்ய முடியும் என்று நன்றி சொல்கிறான்.
DD3 Update: தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் முக்கிய அப்டேட்..! நாள் குறித்த படக்குழு..!
பிறகு தீபா வெளியே வந்து மீண்டும் தனது கெட்டப்பை மாற்றி கொண்டு ஆபிஸ் உள்ளே செல்ல கார்த்திக் தீபா இவ்வளவு நேரம் எங்க போயிட்டிங்க என்று கேட்க ,தீபா ஒருவழியாக எதையோ சொல்லி சமாளித்து விடுகிறாள்.
இங்கு ரெக்கார்டிங் நடந்த விஷயம் தெரியாமல் சிதம்பரமும் அபிராமியும் இனி அந்த பல்லவி பாடவே முடியாது, சாதித்து விட்டது போல பேசி சந்தோசப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
DD3 Update: தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் முக்கிய அப்டேட்..! நாள் குறித்த படக்குழு..!