கார்த்தியை பழி தீர்க்க வந்த மாயா.. அதிர்ச்சியில் தீபா - கார்த்திகை தீபம் அடுத்தடுத்த டுவிஸ்ட் வெயிட்டிங்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவின் பிறந்த நாளை கொண்டாட போவதாக சொல்லிய நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவின் பிறந்த நாளை கொண்டாட போவதாகவும் சீப் கெஸ்ட்டாக பல்லவி வர போவதாகவும் சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hnctvddreasfckq4bdmd7k87/aa3ab289-6481-4edc-a513-bfee7d069dc7_300x168xt.jpg)
Karthigai deepam serial Update
அதாவது, பர்த் டே பார்ட்டியில் தீபா தான் பல்லவி என்ற உண்மையை உடைத்து அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுக்கிறான் கார்த்திக், பிறகு தீபா கார்திக்கியிடம் மன்னிப்பு கேட்க அவன் உங்கள பெரிய பாடகியாக்கி காட்டுறேன் என்று சொல்கிறான். அதன் பிறகு ஐஸ்வர்யாவை சந்திக்கும் மாயா நான் நட்சத்திராவின் தங்கச்சி, சிதம்பரத்தின் மனைவி என அறிமுகம் செய்து கொள்கிறாள்.
இதையும் படியுங்கள்... சௌந்தரபாண்டி திட்டத்துக்கு பலிகடாவான கனி... ஷண்முகம் செய்யப்போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்
Karthigai deepam serial Today Episode
அந்த கார்த்தியை சும்மா விட கூடாது, எனக்கு உங்களுடைய உதவி தேவை என்று சொல்ல ஐஸ்வர்யா ரூபஸ்ரீயையும் இந்த கூட்டணிக்குள் சேர்த்து கொள்கிறாள். இதெல்லாம் முடிந்த பிறகு கார்த்திக் ஆபிசில் இருக்க அங்கு வரும் மாயா நான் நட்சத்திராவின் தங்கச்சி, உங்க வாழ்க்கையை சின்னாபின்னமாக ஆக்காமல் விட மாட்டேன் என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் எடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... மருதநாயகம் முதல் KH 233 வரை... கமல்ஹாசனின் கைவிடப்பட்ட படங்கள் மட்டும் இத்தனையா? முழு லிஸ்ட் இதோ