மதமாற்றம்; 3 முறை கருக்கலைப்பு... கமல்ஹாசன் உருகி உருகி காதலித்த ஸ்ரீவித்யா இத்தனை கொடுமைகளை அனுபவித்துள்ளாரா?
கமல்ஹாசனின் முன்னாள் காதலியும், நடிகையுமான ஸ்ரீவித்யா, திருமணத்துக்கு பின் அனுபவித்த கொடுமைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Kamal, srividya
1970-களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீவித்யா. இவர் 13 வயதிலேயே சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் அபூர்வ ராகங்கள். கே.பாலச்சந்தர் இயக்கிய இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீவித்யா. இருவரும் ஜோடியாக நடித்த முதல் படம் இதுவாகும்.
Kamal Srividya Movies
இப்படத்தில் நடிக்கும்போதே கமல்ஹாசனுக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் உருகி உருகி காதலிக்க தொடங்கியதோடு திருமணம் செய்யவும் முடிவு செய்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு ஸ்ரீவித்யாவின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். அந்த சமயத்தில் கமலுக்கு 19 வயது தானாம். சினிமாவில் அவர் அடுத்தடுத்த உச்சத்தை தொட வேண்டும் என்றும், இந்த காதலால் அது கைகூடாமலும் போகலாம் எனக்கூறியதால் கமல் - ஸ்ரீவித்யாவின் காதல் முடிவுக்கு வந்தது.
Actress Srividya
ஸ்ரீவித்யா உடனான காதல் முறிவுக்கு பின்னர் வாணி கணபதியை காதலித்து கரம்பிடித்தார் கமல். இதையடுத்து நடிகை ஸ்ரீவித்யாவுக்கு இயக்குனர் பரதன் மீது காதல் ஏற்பட்டது. அவர் ஸ்ரீவித்யாவை வைத்து ஏராளமான படங்களை இயக்கி இருந்தார். இவர் கமலின் தேவர்மகன் படத்தை இயக்கியவர் ஆவார். ஆனால் ஸ்ரீவித்யாவின் இந்த காதலும் தோல்வியில் தான் முடிந்தது. இதையடுத்து இயக்குனர் பரதன், நடிகை கேபிஏசி லலிதாவை திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்கள்... பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகியும் பாக்ஸ் ஆபிஸில் மரணஅடி வாங்கிய மெரி கிறிஸ்துமஸ்- முதல்நாள் வசூல் இவ்வளவுதானா?
Sri vidya Tragic Life
இப்படி இருமுறை காதல் தோல்வியை சந்தித்த ஸ்ரீவித்யா, தீக்கனல் என்கிற படத்தில் நடித்தபோது, அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜார்ஜ் தாமஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி கடந்த 1978-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஜார்ஜ் தாமஸிற்காக திருமணத்துக்கு முன்பே கிறிஸ்தவ மதத்துக்கு மாறி இருந்தார் ஸ்ரீவித்யா.
Srividya marriage life
திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்கிற முடிவில் இருந்துள்ளார் ஸ்ரீவித்யா, ஆனால் ஜார்ஜ் தாமஸ் அவரை கட்டாயப்படுத்தி மீண்டும் சினிமாவில் நடிக்க வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய சொத்துக்களை ஜார்ஜ் அபகரித்ததால் அவர் பணத்துக்காக தான் தன்னை திருமணம் செய்திருக்கிறார் என்பதை உணர்ந்த ஸ்ரீவித்யா அவரை 1980-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டாராம். இந்த 2 வருட திருமண வாழ்க்கையில் பல கொடுமைகளை அனுபவித்த ஸ்ரீவித்யா 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
Srividya Kamalhaasan Love
இதையடுத்து சென்னையில் இருந்து திருவனந்தபுரத்தில் குடியேறிய ஸ்ரீவித்யாவுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அதற்காக சிகிச்சை எடுத்தும் பலனளிக்காததால் 2006-ம் ஆண்டு மரணமடைந்தார் ஸ்ரீவித்யா. அவர் தன்னுடைய கடைசி காலகட்டத்தில் தன்னுடைய முதல் காதலனான கமல்ஹாசனை பார்க்க விரும்பி இருக்கிறார். அவரின் ஆசையை அறிந்து அதே காதலுடன் கமலும் அவரை சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்டாராம்.
இதையும் படியுங்கள்... அயலானை விட டபுள் மடங்கு வசூல்... பொங்கல் ரேஸில் கெத்து காட்டிய கேப்டன் மில்லர் - முதல் நாளே இத்தனை கோடி வசூலா?