பிக்பாஸில் ஒரே நேரத்தில் 5 வைல்டு கார்டு எண்ட்ரி... அதிகாரப்பூர்வமாக அறிவித்த கமல் - யார்... யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
Kamalhaasan
பரபரப்புக்கு விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்சியான பிக்பாஸ் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் இரண்டு சீசன்களில் ஆரவ் மற்றும் ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது சீசனில் முகென் ராவ் மற்றும் ஆரி தேர்வாகினர். கடைசியாக நடந்து முடிந்த 5 மற்றும் 6-வது சீசனில் ராஜு மற்றும் அசீம் டைட்டில் வின்னர்கள் ஆகினர்.
Bigg Boss Tamil season 7 contestants
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரவாரத்தோடு கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் நிக்சன், பிரதீப், மணி, விஷ்ணு, விஜய் வர்மா, பவா செல்லதுரை, விக்ரம், யுகேந்திரன், கூல் சுரேஷ் ஆகிய 9 ஆண்டு போட்டியாளர்களும், அனன்யா ராவ், விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா, மாயா, ரவீனா, ஐஷூ, அக்ஷயா, வினுஷா ஆகிய 9 பெண் போட்டியாளர்களும் கலந்துகொண்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Bigg Boss Kamal
இதில் இதுவரை முடிந்துள்ள மூன்று வாரத்தில் அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறி உள்ளனர். இரண்டாவது வாரத்தில் பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் தற்போது 15 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதன்காரணமாக இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரி இருக்கும் என நாம் முன்னரே செய்தி வெளியிட்டு இருந்தோம். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Bigg Boss wild card entry
வழக்கமாக வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப்படுவார்கள். ஆனால் பிக்பாஸ் 7-வது சீசன் பல்வேறு புதுமைகளை கொண்டது என்பதால், வைல்டு கார்டு எண்ட்ரியிலும் ஒரு அதிரடி மாற்றம் செய்துள்ளனர். அது என்னவென்றால் ஒரே நேரத்தில் 5 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக அனுப்ப உள்ளார்களாம். இதனை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Archana, gana bala
அந்த 5 போட்டியாளர்களும் வருகிற அக்டோபர் 28-ந் தேதி இரவு 8 மணிக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கானா பாலா மற்றும் சீரியல் நடிகை அர்ச்சனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், எஞ்சியுள்ள 3 போட்டியாளர்கள் யார் என்பது தான் தற்போது புரியாத புதிராக இருக்கிறது.
இதையும் படியுங்கள்... இத்தாலியில் சொகுசு வீடு... ரூ.150 கோடி சம்பளம் என காஸ்ட்லி ஹீரோவாக வலம் வரும் பிரபாஸின் சொத்து மதிப்பு