Anna Serial: செம்ம காண்டான சௌந்திரபாண்டி.. ஷண்முகம் கொடுத்த வாக்கு யாருக்கு தெரியுமா? அண்ணா சீரியல் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் முத்துப்பாண்டிக்காக தட்டு மாற்றும் விழாவுக்கு கிளம்பி வந்த நிலையில் உங்கள் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சண்முகம் மற்றும் வைகுண்டம் மட்டும் கோவிலுக்கு வரும்போது சவுந்தரபாண்டி வைகுண்டத்தை பற்றி தர குறைவாக பேச, சண்முகம் அவங்களா வந்து கூப்பிடுற வரைக்கும் நாம உள்ள போகக்கூடாது என சொல்லி விடுகிறான்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hmtxr0t4s76p453acq46da7f/anna-serial--1-_300x168xt.jpg)
சௌந்தரபாண்டி நான் வந்து கூப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்க ஒரு கட்டத்தில் பாண்டியம்மாவும் முத்துப்பாண்டியும் இப்படி வம்பு பண்ணிட்டு இருந்தா சந்தேகம் வந்துடும் என்று சொல்ல சௌந்தரபாண்டி வெளியே சென்று அவர்களை வேண்டா வெறுப்பாக கூப்பிட சிரித்துக் கொண்டே கூப்பிட்டால் தான் வருவோம் என சண்முகம் அவரை வெறுப்பேற்றுகிறான்.
பிறகு சௌந்தரபாண்டி வேறு வழி இன்றி சிரித்து கொண்டே கூப்பிட, இருவரும் உள்ளே வருகின்றனர். முத்துப்பாண்டிக்காக பார்த்திருக்கும் பெண் பவானி சாமி கும்பிட்டு விட்டு சண்முகம் காலில் வந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள்.
எனக்கு அக்கா மாமா மட்டும்தான் வேற யாரும் சொந்தம்னு கிடையாது நீங்க நினைச்சா தான் இந்த கல்யாணம் நடக்கும்னு சொன்னாங்க என்று சொல்ல இனிமே உனக்கு ஒரு அண்ணனா நான் இருக்கேன், நான் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன் என சண்முகம் வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.