தலைவர் 171 தான் ரஜினிகாந்தின் கடைசி படமா? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த லோகேஷ் கனகராஜ்
தலைவர் 171 படம் தான் ரஜினிகாந்தின் கடைசி படமாக இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
Rajinikanth, Lokesh Kanagaraj
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக 4 மாஸ் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் லியோ. நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லியோ படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார்.
Thalaivar 171 not a LCU movie
அந்த பேட்டிகளில் தான் அடுத்ததாக இயக்க உள்ள ரஜினிகாந்தின் தலைவர் 171 படம் குறித்த ஆச்சர்ய தகவல்களையும் வெளியிட்டு வருகிறார் லோகேஷ். லியோ படம் எல்சியூ-வில் வருமா, வராதா என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் அவர், தலைவர் 171 நிச்சயம் எல்.சி.யூ.வில் வராது என்பதை தற்போதே உறுதியாக கூறிவிட்டார். அது வேறு கதைக்களத்தில் உருவாகும் படம் என்றும் கூறிவிட்டார். மேலும் இது ஒரு புதுவிதமான படமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
thalaivar 171
அதோடு தலைவர் 171 படத்தின் கதையை நடிகர் விஜய்யிடம் தான் ஏற்கனவே சொல்லிவிட்டதாகவும், அந்த கதையைக் கேட்டதும், நான் எந்த ஒரு ஸ்டோரி கேட்டாலும் அவ்வளவு சீக்கிரம் இம்பிரஸ் ஆகமாட்டேன். ஆனால் இந்த கதை கேட்ட 10 நிமிடத்திலேயே இம்பிரஸ் ஆகிட்டேன். செம்மையா இருக்குடா என சொன்னதாக லோகேஷ் கனகராஜ் தனது பேட்டிகளில் கூறி இருந்தார். தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.
Thalaivar 171 Movie update
தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் கமிட் ஆனபோது, அது தான் ரஜினியின் கடைசி படம் என்றும், அந்த படத்தோடு அவர் சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும் செய்திகள் உலா வந்தன. இது உண்மையா என்பது குறித்து லோகேஷிடமே சமீபத்திய பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கண்டிப்பாக தலைவர் 171 ரஜினியின் கடைசி படம் இல்லை. அவருடைய லைன் அப் எனக்கு தெரியும். ஆனால் சொல்ல மாட்டேன். இது திடீரென உருவான கூட்டணி. ஒரு நாள் லியோ ஷூட்டிங்கில் இருந்தபோது அனிருத் தான் ரஜினி சாருக்கு கதை சொல்ல சொன்னார். உடனே அன்று இரவே ஒரு கதையுடன் சாரை சந்திக்க சென்றேன். அவருக்கு கதை கேட்டதும் பிடித்துவிட்டது. உடனே பண்ணலாம்னு சொல்லிவிட்டார். அதனால் தான் அடுத்த படமாக அதை எடுக்க உள்ளேன் என லோகேஷ் கூறினார்.
இதையும் படியுங்கள்... ஐயப்பனும் கோஷியும்.. தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டேன்.. அதுவும் அந்த இரு தமிழ் நடிகர்களை வைத்து - லோகேஷ்!