Indraja Reception : மாமியாருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தமா? சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர் மருமகன்..
தனது திருமண வரவேற்பில் ரோபோ சங்கர் மருமகன் கார்த்திக் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
குறிப்பாக மாரி, வாயை மூடி பேசவம், விஸ்வாசம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என பல படங்களில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் ரோபோ சங்கர்.
robo shankar
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் நோயால் பாதிக்கப்பட்ட ரோபோ ஷங்கர் அதற்காக சிகிச்சையில் இருந்து வந்தார். திடீரென உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படும் ரோபோ சங்கரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிகமாக மது குடித்ததால் தான் அவரின் உடல் எடை குறைந்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது பின்னர் தான் தெரியவந்தது. பல மாதங்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு தற்போது மீண்டும் திரையில் தோன்ற தொடங்கி இருக்கிறார் ரோபோ ஷங்கர்.
ரோபா சங்கருக்கு பிரியங்கார் சங்கர் என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர். இந்திரஜா பிகில் படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பாண்டியம்மா என்ற கேரக்டரில் அசத்தி இருப்பார் இந்திரஜா. இந்த நிலையில் இந்திரஜாவுக்கு அவரின் மாமா உறவு முறையான கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கடந்த 24-ம் தேதி இந்திரஜா – கார்த்திக் திருமணம் கோலாகலமாக நடந்தது. பின்னர் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது, திருமணம், வரவேற்பு இரண்டிலுமே பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
குறிப்பாக கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டதால் இந்திரஜாவின் திருமண வரவேற்பு களைகட்டியது. இந்த சூழலில் தனது திருமண வரவேற்பில் மணமகன் கார்த்திக் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும், கார்த்திக்கும் மேடையில் நடனமாடிய போது பிரியங்காவின் உதட்டில் அவர் முத்தம் கொடுத்தார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் யாராவது மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுப்பாங்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதெல்லாம் என்ன மாதிரியான பழக்கம் என்றும் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.