ஒரு நிமிடத்திற்கு ரூ.4.5 கோடி சம்பளம் வாங்கிய உச்ச நடிகர்.. அதுவும் கேமியோ ரோலுக்காக.. யார் தெரியுமா?
இந்தியாவின் உச்ச நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் நடித்ததற்காக ரூ.35 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இந்திய நடிகர் முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ.1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கினார். ஆனால் இந்தியாவின் உச்ச நடிகர்களின் சம்பளம் அதன்பின்னர் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது நாட்டின் உச்ச நட்சத்திரங்கள் ஒரு படத்திற்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர்.
குறிப்பாக அமீர் கான், ஷாருக்கான், பிரபாஸ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சல்மான் கான் மற்றும் விஜய் போன்ற நடிகர்கள் ரூ. 100 கோடிக்கும் சம்பளமாக பெறுகின்றனர். இந்த நடிகர்கள் அனைவரும் ஒரு படத்திற்கு ரூ 100 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளனர், இவர்களில் சிலருக்கு தங்களின் மிகப்பெரிய வெற்றிகளின் லாபத்திலும் பங்குகளை பெறுகின்றனர். அதன்படி இந்த நடிகர்கள் படத்திற்கு ரூ 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளனர். ஆனாலும் இந்த நடிகர்களின் ஒரு நிமிட வருமானம் 2-3 கோடி ரூபாய் மட்டுமே.
Ajay Devgn
ஆனால் ஒரு நடிகர் ஒரு நிமிடத்திற்கு ரூ. 4.50 கோடி சம்பளம் வாங்குகிறார், அதுவும் ஒரு கேமியோ தோற்றத்திற்காக மட்டுமே.. அவர் வேறு யாருமில்லை. பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தான். கடந்த 2022-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் அஜய்தேவ்கன் கேமியோ ரோலில் நடித்திருப்பார்.
இந்த படத்தில் நடித்தற்காக அவர் ரூ. 35 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அஜய் தேவ்கன் RRR படத்தில் வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றினார். அதன்படி பார்த்தால் அவர் ஒரு நிமிடத்திற்கு ரூ. 4.5 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
RRR படத்தில் வரும் ஃபிளாஷ்பேக் காட்சியில் அஜய் தேவ்கன் - ஸ்ரேயா ஆகியோர் கேமியோர் ரோலில் நடித்திருந்தனர்.. இந்த படம் சுமார் ரூ. 500 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவானது. எனவே பெரிய பட்ஜெட் படம் என்பதால் அஜய் தேவ்கனுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக அவர் மாறினார்.
மற்ற படங்களை பொறுத்த வரை கேமியோ ரோலில் முழு தோற்றத்தில் நடித்த படங்களுக்கும் ரூ. 35 கோடி சம்பளம் வாங்கினார். எனினும் ன்ஹாஜி, த்ரிஷ்யம் 2 போன்ற படங்களுக்கு இவரின் சம்பளம் 100 கோடியை தாண்டியது..
Ajay Devgn
இந்த சூழலில் ஜோதிகா மற்றும் மாதவன் ஆகியோரும் நடிக்கும் ஷைத்தான் படத்தில் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படம் மார்ச் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அஜய் தேவ்கனின் சிங்கம் 3 படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. ரோஹித் ஷெட்டியின் காப் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் இப்படத்தில் அக்ஷய் குமார், ரன்வீர் சிங், அர்ஜுன் கபூர், தீபிகா படுகோன், கரீனா கபூர், டைகர் ஷெராஃப் மற்றும் ஜாக்கி ஷெராஃப் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவை தவிர மைதான் என்ற வாழ்க்கை வரலாற்று திரைப்பத்திலும் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார்.