அடிப்பாவி.. நீ தாயா இல்ல பேயா? கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க பெற்ற குழந்தைகளை கொலை செய்த கொடூரம்!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தைகள் கொலை செய்த காமக்கொடூர தாய் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Crime News
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷீத்தல் போலே (25). இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், 3 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 31-ம் தேதி காலை ஷீத்தலின் கணவர் வெளியே சென்றுவிட்டு மாலை மீண்டும் வீட்டிற்கு வந்தபோது குழந்தைகளை எழுப்ப முயன்றார். அப்போது, குழந்தைகள் அயர்ந்து தூங்குவதாகவும் அவர்களை எழுப்பவேண்டாம் என மனைவி தெரிவித்தார்.
Police investigation
நீண்ட நேரமாகியும் குழந்தைகள் எந்த அசையும் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை அழுது கதறினார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
illegal love
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில் பெற்ற தாயே குழந்தையை கொன்றது அம்பலமானது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது ஷீத்தலுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
Mother Arrest
இந்நிலையில், அந்த வாலிபர் ஷீத்தல் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால் குழந்தைகளை கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஷீத்தல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.