செம்பு பாத்திரம் பளபளக்க இந்த பொருட்களே போதும்.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!
செம்பு பாத்திரங்களை எளிதாக சுத்தம் செய்ய இந்த முறையை பின்பற்றினால் பளபளப்பாக மாறும்.
பொதுவாக சமையலறையில் பல வகையான பாத்திரங்கள் பயன்படுத்தப்படும். எஃகு, அலுமினியம், கண்ணாடி, பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்கள் இதில் அடங்கும். ஆனால் சில வீடுகளில் செம்பு பாத்திரங்களும் பயன்படுத்தப்படும்.
முந்தைய காலங்களில் செம்பு பாத்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. உணவு கூட செம்பு தட்டுகளில் தான் வழங்கப்பட்டது. கிராமத்தில் இன்றும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. செம்பு பாத்திரங்கள் மனித உடலுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மேலும். இந்த பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.
அதேசமயம் செம்பு பாத்திரத்தில் உணவு சாப்பிட்டால் உடலில் நோய்கள் குணமாகும் என்றும் கூட சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பாத்திரங்கள் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அவற்றை ஒழுங்காக பராமரிக்க விட்டால் காலப்போக்கில் செம்பு பாத்திரங்களில் நிறம் கருப்பாக மாறிவும்.
ஆனால், இந்த பாத்திரங்களை முறையாக சுத்தம் செய்து பராமரிப்பதன் மூலம் நீண்ட நாட்களுக்கு புதிதாக வைத்திருக்க முடியும். எனவே, செம்பு பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்ய எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: எச்சரிக்கை: மறந்தும் கூட இந்த பானங்களை செப்பு பாத்திரத்தில் குடிக்காதீங்க..!! விளைவுகள் பயங்கரம்..!!
செம்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு, நிம்பு பூல், டிஷ் வாஷ் லிக்விட், பேக்கிங் சோடா, வினிகர் (அ) லெமன் ஜூஸ், உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இவற்றை ஒன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: நீங்கள் காப்பரில் தண்ணீர் குடிக்கிறீங்களா..? இதை ஒருபோதும் மறக்காதிங்க..!!
இப்போது கழுவ வேண்டிய பாத்திரத்தை தண்ணீரில் நன்கு நனைத்து, கரைத்து வைத்த அந்த கலவையை பாத்திரம் முழுவதும் ஊற்றி ஊற வைத்து விடுங்கள்.. சில நிமிடம் கழித்து பாத்திரத்தை நன்றாக தேய்த்துக் கழுவும். அவ்வளவுதான் உங்கள் பாத்திரம் இப்போது ஜொலி ஜொலிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D