தேர்தல் முடியுற வரைக்கும்.. எவ்வளவு பாட்டில் சரக்கை எடுத்துட்டு போலாம் தெரியுமா? மீறினால் பறிமுதல்!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பல விஷயங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Liquor Bottle Limit
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்ததுடன், தேர்தல் நடத்தை விதிகளும் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
Liquor Bottle
நடத்தை விதிகளின் போது, தலைவர்கள் முதல் மற்றவர்கள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன. இந்த காலகட்டத்தில், அனைத்து மாநிலங்களிலும் வாகனங்கள் கடுமையாக சோதனை செய்யப்படுகின்றன. ஏனெனில் தேர்தல் நேரத்தில் அதிக அளவில் பணமும் மதுவும் சப்ளை செய்யப்படுகிறது.
Wine Bottles
ரொக்கம், மதுபானம் தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் வைத்திருந்தால், அதற்கான ரசீது இல்லை என்றால், போலீசார் பறிமுதல் செய்யலாம்.
Lok sabha Election 2024
எந்த மாநிலத்திலும் இரண்டு முதல் மூன்று பாட்டில்கள் வரை எடுத்துச் செல்லலாம் என்பது போல, மதுபானம் தொடர்பான விதிகள் மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டவையே. சில மாநிலங்களில் சீல் செய்யப்பட்ட பாட்டில் அனுமதிக்கப்படுகிறது.
Elections 2024
உத்தரபிரதேசத்தில், வேறு மாநிலத்தில் இருந்து ஒரே ஒரு சீல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை மட்டுமே கொண்டு வர முடியும், இதற்கு மேல் கொண்டு வந்தால், 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.