Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரத்தில் கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பொளந்து கட்டப்போகுதாம் மழை.!
தமிழகத்தில் கடலூர், ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவ கூடும். இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருந்தது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01cs1mmv5xn64d48xcgzwb8xdz/tamilnadu-rain_300x169xt.jpg)
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கடலூர், ராமநாதபுரம், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க;- Tamilnadu Heavy Rain: இந்த 16 மாவட்டங்களில் வச்சு செய்யப்போகுதாம் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!