குருபெயர்ச்சி 2024 : இன்னும் 2 மாதங்களில் இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம்..
வரும் மே மாதம் 1-ம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு சாதக பலன்களையும், அதிர்ஷ்டத்தை கொண்டு வரப்போகிறது.
ஜோதிடத்தின் படி குரு பகவான் சுப கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உங்கள் ஜாதகத்தில் சாதகமான இடத்தில் இருந்தால் ஏராளமான நற்பலன்களை வழங்குவார். அதனால் தான் குரு பார்வை கோடி நன்மை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வரும் மே மாதம் 1-ம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு சாதக பலன்களையும், அதிர்ஷ்டத்தை கொண்டு வரப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் :
குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறப்போகிறார்கள். உங்களின் நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். திடீர் பண வரவு இருக்கும். எனவே சுப செலவுகளும் ஏற்படலாம். இந்த காலக்கட்டத்தில் புதிய வேலைகளை தொடங்குவது சாதக பலன்களை கொடுக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியமும் நல்ல நிலையில் இருக்கும்.
Cancer and Pisces
கடகம் :
கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதக பலன்களை கொடுக்கும். வேலையில் சுப பலன்களை எதிர்பார்க்கலாம். நிதி நிலையில் மாற்றம் ஏற்படலாம். வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் இருக்கும்.
Leo daily rashifal
சிம்மம்
ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி நடப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் அற்புத பலன்கள் கிடைக்கப் போகிறது. உங்களின் நிதி நிலை மேம்படும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
Astro
கன்னி :
கன்னி ராசிக்கார்களுக்கு இந்த குருபெயர்ச்சி சிறப்பான பலன்களை வழங்கும். முன்னோர்களின் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் நல்ல உறவு இருக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் பொன்னான காலமாக இது இருக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை சந்திப்பீர்கள்.
Sagittarius
தனுசு :
இந்த குருப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய வழிகளில் வருமானம் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்தும் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கலாம்.