உன் நினைவில் மூழ்கி இறந்து போகிறேன்! மறைந்த மகள் மீரா குறித்து பாத்திமா விஜய் ஆண்டனியின் கண்ணீர் பதிவு!
விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி, முதல் முறையாக மறைந்த மகள் மீரா குறித்து நெஞ்சை உலுக்கும் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் போட்டுள்ளார்.
Vijay Antony:
எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, நடுதர குடும்பத்தில் இருந்து வந்து.. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் பட தொகுப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டவர் விஜய் ஆண்டனி. தன்னால் முடிந்தவரை ஏழை எளியவர்களுக்கு இவர் தொடர்ந்து உதவி செய்து வருவது மட்டும் அனைவரிடமும் இனிமையாக பழகும் குணமுடையவர்.
Vijay Antony Married With Farthima:
இவர் தொகுப்பாளினி பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு மீரா மற்றும் லாரா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி, அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Vijay Antony Daughter Suicide:
16 வயதே ஆகும் மீராவின் தற்கொலைக்கு என்ன காரணம்? என பல தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், ஏற்கனவே மீரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மற்றும் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மீராவின் உடல் அவரின் தந்தை விஜய் ஆண்டனியின் குடும்ப வழக்கப்படி, கிருஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் மீராவின் மரணத்தை பற்றி கேள்விப்பட்ட பல பிரபலங்கள், மற்றும் விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
Vijay Antony fell down Meera Memories:
தன்னுடைய மகள் மறைவினால் மிகவும் கவலையில் உறைந்த விஜய் ஆண்டனி, தற்போது வரை அதில் இருந்து முழுமையாக மீண்டு வரவில்லை என்றாலும்... தன்னால் யாரும் பாதிப்படைய கூடாது என்கிற நோக்கில் படப்பணிகளில் மீண்டும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். மேலும் மகள் மீராவின் நினைவில் இருந்து இன்னும் மீளவில்லை என்பதை... அவர் வெளியிட்ட அறிக்கையிலும் தெரிவித்திருந்தார்.
Fatima Vijay Antony Tweet:
இதைத்தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனியின் மனைவி, பாத்திமா சமூக வலைத்தளத்தில் மிகவும் உருக்கமான கண்ணீர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது... "நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் உன்னை எனக்கு மிக அருகிலேயே வைத்திருந்திருப்பேன், சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட உன்னைக் காட்டியிருக்க மாட்டேன், இப்போது உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன், நீ இல்லாமல் வாழ முடியாது, அம்மா - அப்பாவிடம் திருப்பி வந்து விடு. லாரா உனக்காக காத்திருக்கிறாள். லவ் யூ தங்கமே என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு படிப்பவர்கள் நெஞ்சுகளையே கலங்க வைத்துள்ளது.