இந்த தேதிகளில் வெளியே போகாதீங்க.. எந்தெந்த இடங்களுக்கு போக கூடாது.. வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட்!
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பரவலான இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
TN Rain Alert
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Meteorological Department
மேலும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
Tamilnadu Rain
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் இன்று வழக்கம் போல் மாலை / இரவு புயல்கள் மீண்டும் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும். வழக்கமான இடியுடன் கூடிய மழையாக இருக்கும்.
Chennai Rain
கேரளா/கர்நாடகா மற்றும் நீலகிரி, வால்பாறை, கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பருவமழை தொடங்கும். இந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மலைகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
Tamilnadu Weatherman
ஜூன் 22/23 முதல் ஜூன் 28/29 வரை மூணாறு, இடுக்கி, வயநாடு, குடகு, சிக்மகளூர், ஷிமோகா, நீலகிரியின் கூடலூர்-பந்தலூர் மலைப்பகுதிகள், வால்பாறை, கேரளா மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். பருவமழையின் முதல் பருவத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு நல்ல வரத்து கிடைக்க வேண்டும்.
உங்கள் பட்ஜெட் ரூ.15 ஆயிரம் ரூபாய் தானா.. பட்ஜெட்டிற்குள் அடங்கும் தரமான 5 ஸ்மார்ட்போன்கள்..