'அலைபாயுதே' படத்தில் ஷாலினிக்கு முன் ஹீரோயினாக நடிக்க இருந்தது இந்த பாடகியா? யாருனு தெரிஞ்சா அசந்துடுவீங்க!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, 'அலைபாயுதே' படத்தில் ஷாலினிக்கு முன்பு கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தனித்துவமான காதல் கதையை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் மணிரத்னம், கடந்த 2000-ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் தான் அலைபாயுதே. மாதவன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஜெயசுதா, சொர்ணமாலியா, விவேக், வேணு அரவிந்த், அரவிந்த்சாமி, குஷ்பூ, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
கிராமத்தில் நடைபெறும் தன்னுடைய நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ள செல்லும் கார்த்திக் (மாதவன்), அங்கு கதாநாயகியான சக்தியை (ஷாலினியை) சந்திக்கிறார். பின்னர் இருவரும் தங்களுடைய ஊரில், ரயிலில் சந்திக்கின்றனர். சக்தி மீது கார்த்திக் காதல் கொள்கிறார். ஆரம்பத்தில் இதை ஏற்க மறுக்கும் சக்தி, ஒரு கட்டத்தில் கார்த்தியின் காதலை ஏற்று கொள்கிறார்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டு, தங்களுடைய வீட்டிலேயே வசிக்கும் இவர்கள்... திருமணம் பற்றிய தகவல் வீட்டுக்கு தெரியவந்ததும் வீட்டை விட்டு வெளியேறும் இருவரும், தனி குடும்பம் செய்கின்றனர்.
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு இடையே உள்ள அன்பு, அன்னியோன்னியம், குழப்பம், வெறுப்பு, கோபம் என அனைத்தையும் உணர்வு பூர்வமாக இந்த படத்தில் காட்டி இருந்தார் மணிரத்னம். குறிப்பாக இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்பட பின்னர், இருவரும் ஒன்று சேரும் தருணம் காதல் உணர்ச்சியின் உச்சம் எனலாம்.
இளம் ரசிகர்கள் மத்தியில், அதிகம் ரசிக்கப்பட்ட இந்தப் படத்தில் ஷாலினிக்கு முன்பு கதாநாயகியாக நடிக்க வைக்க இயக்குனர் மணிரத்தினம் முதலில் தேர்வு செய்தது பிரபல பாடகியும் - நடிகையுமான வசுந்தரா தாசை தான். ஆனால் அப்போது மணிரத்தினம் கொடுத்த வாய்ப்பை வசுந்தராதாஸ் ஏற்காத நிலையில், பின்னர் ஷாலினிக்கு இந்த வாய்ப்பு சென்றது.
அதே போல் இந்த படத்தில் குஷ்புவின் கணவராக அரவிந்த்சாமி நடித்திருந்த நிலையில், அவருக்கு முன்பு ஷாருகான், மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகையரிடம் மணிரத்னம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில்... அவர்கள் நடிக்க மறுத்துவிட்ட காரணத்தால், இந்த வாய்ப்பு அரவிந்த்சாமிக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.