ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிய சண்முகம்... இசக்கியிடம் பல்பு வாங்கிய செளந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்கூல் பங்க்ஷனுக்கு போக வேண்டாம் என்று சனியன் சண்முகத்திடம் சொன்ன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சனியன் நீ அந்த ஸ்கூல் பங்க்ஷனுக்கு போக வேண்டாம் என்று சண்முகத்திடம் சொல்ல சண்முகம் காரணம் கேட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சனியன் லுங்கியோட யாராவது ஸ்கூலுக்கு போவாங்களா என்று சொல்கிறான். இதைக் கேட்ட பரணி ஆமா சனியன் சொல்றது சரிதான் என்று சண்முகத்தின் தங்கைகளுடன் சேர்ந்து கோட்டு சூட்டு தைக்க முடிவெடுக்கிறார்.
Zee Tamil Anna Serial
அதன் பிறகு சண்முகத்தை டைலர் கடைக்கு கூட்டி செல்ல, சண்முகம் சட்டை இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என்று சொல்ல, கோட்டு சூட்டு தைக்க அளவு எடுத்துக் கொள்கின்றனர். மறுபக்கம் சௌந்தரபாண்டி பிரின்சிபலை சந்தித்து அவரை அடித்து உனக்கு அந்த சண்முகம் பெரிய ஆளா போயிட்டானா நீ திரும்பவும் பத்திரிக்கை அடிக்கணும் அதுல சிறப்பு விருந்தினர் என்று என் பேரு இருக்கணும், அத தான் நீ இந்த ஊருக்கு கொடுக்கணும். அந்த சண்முகம் இந்த பங்ஷனுக்கு வரக்கூடாது என்று சொல்ல, பிரின்ஸ்பல் வேறு வழி என்று சம்மதம் சொல்கிறார். இந்த விஷயம் அறிந்து இசக்கியும் பாக்கியமும் மரியாதைய கேட்டு வாங்க கூடாது என்று கலாய்கின்றனர்.
இதையும் படியுங்கள்... கார்த்தியை தோற்கடிக்க நடக்கும் சதி... அம்பலமாகும் ரியாவின் உண்மை முகம்... கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
Anna Serial Update
அடுத்ததாக தங்கைகள் சண்முகத்தை இங்கிலீஷில் பேச வைக்க முடிவெடுத்து நைட்டெல்லாம் அவனுக்கு பிராக்டிஸ் கொடுக்க, அவன் இங்கிலீஷ் பேச தடுமாறி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்குகிறான். ஸ்கூலில் சண்முகம் போட்டோ போட்ட பேனர் எல்லாம் எடுத்து விட்டு சௌந்தரபாண்டி போட்டோ போட்ட பேனரை மாற்றுகின்றனர். மறுநாள் காலையில் சண்முகத்துக்கு கோட்டு சூட்டு போட்டு அவனை ரெடி பண்ண, சௌந்தரபாண்டி சனியனுக்கு போன் போட்டு அந்த சண்முகம் இந்த பங்க்ஷனுக்கு வரக்கூடாது பார்த்துக்கோ என்று சொல்கிறார்.
Anna serial Today Episode
சண்முகம் கோட்டு சூட்டில் வர, சனியன் ஆள் அடையாளம் தெரியாததால் ஏதோ புது அதிகாரி வந்திருக்காரு என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்துவிட தங்கைகள் அவனை கூட்டிக்கொண்டு கிளம்புகின்றனர். சண்முகம் ரோடு எல்லாம் நடந்து வர அவனை பார்த்து எல்லோரும் வணக்கம் போடுகின்றனர். யார் இந்த அதிகாரி என்று கேட்க, சண்முகம் என்ன பார்த்தா இப்படி எல்லாம் கேட்கிறார்கள் என ஆச்சரியப்படுகிறான். பிறகு சனியன் சண்முகம் வரல ஏதோ ஒரு ஆபிசர் தான் வராரு என்று சௌந்தரபாண்டிக்கு சொல்ல, அதை கேட்டு அவர் சந்தோஷம் அடைகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... முதன்முறையாக சூர்யா படத்துக்கு இசையமைக்கும் பிரபலம்... Suriya 44 படத்தின் இசையமைப்பாளர் இவரா?