23 வயதில் திருமணம்.. 30 வயதில் 2 குழந்தைக்கு தாயாக ஆசை பட்ட சாய் பல்லவி! கல்யாணத்தை தள்ளி போட்டது ஏன்?
நடிகை சாய் பல்லவி 23 வயதில் திருமணம் செய்து கொள்ள ஆசை பட்ட நிலையில்... அந்த ஆசை ஏன் நிறைவேறாமல் போனது என்பது பற்றி அவர் பழைய பேட்டியில் கூறியுள்ள தகவல் தற்போது மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.
நடிகை சாய் பல்லவி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில்... தன்னுடைய திருமணத்திற்கு முன்பே, தன்னுடைய தங்கையின் காதலுக்கு பச்சை கொடி காட்டி, திருமண நிச்சயதார்தத்தையும் அமோகமாக நடத்தி வைத்து விட்டார். சமீபத்தில் இவரின் தங்கை, பூஜா கண்ணனின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
கூடிய விரைவில் பூஜா கண்ணனின் திருமண தேதி அறிவிக்கப்படும் என... எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்கள் பலர் ஏன், சாய் பல்லவி தன்னுடைய திருமணத்தை தள்ளி போடுகிறார் என்பது தான்.
சாய் பல்லவி தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம், பீக்கில் இருக்கும் இவரது சினிமா கேரியர் தான் என கூறப்படுகிறது. தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக 'டாண்டல்' படத்தில் நடிக்கும் சாய்பல்லவி, தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK 21 படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியிலும், இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தன்னுடைய 31 வயது வரை, திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சாய் பல்லவி... தன்னுடைய 23 வயதில் திருமணம் செய்து கொண்டு, 30 வயதிற்குள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என நினைத்தவர் என்றால் நம்புவீர்களா? ஆனால் அதான் உண்மை. இந்த தகவலை அவரே தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் இவர் அறிமுகமான போது பல தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சாய் பல்லவியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு மிகவும் போல்டாக, தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 'எனக்கு 18 வயது இருக்கும் போது, 23 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். 30 வயதிற்குள் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று நினைத்தேன். எம்.பி.பி.எஸ் படிக்கும் போது கூட ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பின்னர் அந்த முடிவுகளை மாற்றினேன்.
Sai Pallavi
எங்கள் வீட்டில் சில முக்கியப் பொறுப்புகளை ஏற்க வேண்டி இருந்ததால், திருமணத்தை தள்ளி வைத்தேன். பின்னர் ஒரு நடிகையாக நல்ல பெயர் கிடைத்ததால், திருமணத்துக்கு கால அவகாசம் நீட்டினேன்’. என திருமணம் தள்ளி போனதற்கான காரணத்தை கூறியுள்ளார். தொடர்ந்து தன்னுடைய கணவர் எப்படி இருக்க வேண்டும் என்கிற கேள்விக்கு பதிலளித்த சாய் பல்லவி, அணைத்து பெண்களை மதிக்க வேண்டும், கொஞ்சம் குழந்தைத்தனமான மனநிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.