அமைச்சருடன் ஆய்வுக்கு சென்றபோது வழுக்கி விழுந்த திமுக எம்எல்ஏவின் கால் முறிவு..!
சென்னை அண்ணா நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்வுடன் சென்ற போது தவறி விழுந்ததில் திமுக எம்எல்ஏவுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத பெய்த அதீகனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொதுமக்கள் உணவு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hh11s7hxajea5pw126x144gr/dmk-2_300x169xt.jpg)
அதன்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நகரில் உள்ள அமைந்தகரை பகுதிகளில் வெள்ள நீர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அவருடன் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் ஆய்வு செய்துகொண்டிருந்த போது அம்மா மாளிகையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அம்மா மாளிகையில் ஆய்வு கூட்டம் முடிந்து வெளியே வந்த போது படிக்கட்டில் வழுக்கி கீழே விழுந்ததில் திமுக எம்எல்ஏ மோகனுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். உடனே அவரை அங்கிருந்தவர் மீட்டு படகு மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.