வேறு ஒருவருடன் மருமகள் உல்லாசம்.. நேரில் பார்த்த மாமனார்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
மாமனார் கண்முன்னே வேறு ஒருவருடன் மருமகள் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே கீழக்கலங்கல் இந்திரா காலனியை சேர்ந்தவர் கனகராஜ்(25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிக்குயில்(22). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் கவிக்குயில் திருமணத்திற்கு முன்னர் பக்கத்து ஊரை சேர்ந்த வெங்கடேஷ்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனாலும், பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளை கனகராஜை திருமணம் செய்துகொண்டார். கனகராஜை திருமணம் செய்து கொண்டாலும் கவிக்குயில் காதலன் வெங்கடேஷ் உடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வேலைக்கு சென்ற பிறகு கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதையும் படிங்க;- என் புருஷன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நாம ஒன்னு சேர முடியாது.. உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு மனைவி செய்த பகீர்.!
வழக்கம் போல வீட்டுக்கு வரழைத்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த போது மாமனார் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே வேலைக்கு சென்ற மகனை வீட்டிற்கு வரழைத்து விஷயத்தை கூறியுள்ளார். பின்னர், கவிக்குயிலின் அம்மா முத்துமாரி(50), அண்ணன் அன்பரசு(25) ஆகியோரையும் வரவழைத்து வெங்கடேஷை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிவிட்டு நாடமாடிய மனைவி.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
murder
வாக்குவாதம் முற்றியதை அடுத்து அரிவாளை கொண்டு அன்பரசு வெங்கடேஷை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார். இதில் வெங்கடேஷின் இடது கை மணிக்கட்டு துண்டாக வெட்டுப்பட்டு கீழே விழுந்தது. காதலன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்ததும் கவிக்குயில் தற்கொலைக்கு முயற்சித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.