Power Shutdown in Chennai: சென்னை மக்களே.. இன்று எந்ததெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாசர்பாடி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01evp9x6yfh78g5ze85dmpbc54/untitled--5--jpg_300x171xt.jpg)
வியாசர்பாடி:
மார்க்கெட் மற்றும் தொழிற்பேட்டை எஸ்டேட், ஈ.எச். ரோடு, பி.வி.காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புது நகர், எம்.பி.எம். தெரு, சென்ட்ரல் குறுக்குத் தெரு, ஏ,பி,சி கல்யாணபுரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு, சாமியார் தோட்டம், பல்லா தெரு 1 முதல் 3, உதய சூர்யன் நகர், எஸ்ஏ காலனி, சர்மா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.